தமிழகம்

அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டது: பழனிசாமி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ‘தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டம் என, மத்​திய அரசின் ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை நகலெடுத்து அறி​வித்​து, அரசு ஊழியர்​களை திமுக அரசு ஏமாற்றி விட்​டது’ என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் மீண்​டும் கொண்​டு ​வரப்​படும் என 2021-ல் தேர்​தல் வாக்​குறு​தி​யாக அளித்து ஆட்​சிக்கு வந்த திமுக, கடந்த நான்​கரை ஆண்​டு​களாக எது​வும் செய்​ய​வில்​லை. அரசு ஊழியர்​களின் தொடர் போராட்​டங்​களை சமாளிப்​ப​தற்​காக, ஆட்சி முடியப்​போகும் நேரத்​தில் ‘உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டம்’ என்ற ஒரு ஏமாற்று மாடல் திட்​டத்தை அறி​வித்து அரசு ஊழியர்​களை ஏமாற்​றி​யுள்​ளது.

மத்​திய அரசை குறை​கூறும் திமுக அரசு, மத்​திய அரசால் கொண்​டு​வரப்​பட்ட ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தின் பெயரை மாற்​றி, தற்​போது தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டம் என்று அறி​வித்து அரசு ஊழியர்​களை முதல்​வர் ஸ்டா​லின் ஏமாற்​றி​யுள்​ளார்.

பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் அரசு ஊழியர்​களின் பங்​களிப்பு ஏது​மில்​லை. ஓய்​வு​பெறும்​போது கடைசி மாத சம்​பளத்​தில் 50 சதவீதம் ஓய்​வூ​தி​யம், விலை​வாசிப் புள்ளி உயர்​வின் அடிப்​படை​யில் அகவிலைப் படி​யும் கிடைக்​கும். ஊதி​யக்​குழு பரிந்​துரை​யின்​படி ஓய்​வூ​திய அடிப்​படைத் தொகை​யும் மாற்​றியமைக்​கப்​படும்.

ஆனால், தற்​போது அறிவிக்​கப்​பட்​டுள்ள தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் ஊழியர்​களிட​மிருந்து மாதம்​தோறும் 10 சதவீதம் பிடித்​தம் செய்​யப்​படு​வது ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தின் அப்​பட்​ட​மான நகல் ஆகும். மேலும், பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் இருந்த அம்​ச​மான ஊதி​யக்​குழு பரிந்​துரை அடிப்​படை​யில் ஓய்​வூ​தி​யம் அவ்​வப்போது உயர்த்தி மறுநிர்​ண​யம் செய்​யப்​படும் என்ற பரிந்​துரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் இல்லை.

உண்​மையை அரசு ஊழியர்​கள் ஒரு​நாள் உணர்​வார்​கள். தாங்​கள் ஏமாற்​றப்​பட்​டதை​யும், அதற்கு சங்க நிர்​வாகி​கள் துணை போயுள்​ளனர் என்​ப​தை​யும் புரிந்து கொள்​வார்​கள். வரும் தேர்​தலில் திமுகவை தோற்​கடித்து தக்க பரிசைத் தரு​வார்​கள். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT