செங்கோட்டையன்

 
தமிழகம்

“மின் கட்டமைப்பு பணிகளை திமுக ஆட்சியில் செய்யவில்லை” - அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கோவை: சென்​னைக்கு 5 ஆயிரம் மெகா​வாட் மின்​சா​ரம் தேவைப்​படும் நிலை​யில், மின் கட்​டமைப்பு பணி​களை கடந்த திமுக ஆட்​சி​யில் செய்​ய​வில்லை என அமைச்​சர் செங்​கோட்​டையன் கோவை​யில் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​தார்.

கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று முன்தினம் அவர் கூறியதாவது: மேட்​டூர் அணையை பொறுத்​தவரை நீர்​பிடிப்பு பகு​திகளில் மழையும் நீர்வரத்​தும் குறை​வாக இருக்​கிறது. தண்​ணீர் கூடு​தலாக இருந்​தால் மட்​டுமே திறக்க முடி​யும் பிரதமருடன் முதல்​வர் விஜய் பேசும்​போது, நமக்​குத் தேவை​யான நீரை மாதம்​தோறும் வழங்க வலி​யுறுத்தி இருக்​கிறார்.

அதி​முக ஆட்​சி​யிலும் மின்​வெட்டு ஏற்​பட்​டிருக்​கிறது. சென்​னை​யில் ஐந்​தாண்டு காலத்​தில் ஏழா​யிரம் கோடி ரூபாய் செலவு செய்​யப்​பட்​டு, மின்​சா​ரத்தை மக்​களுக்கு பயன்​படுத்​து​வதற்கு தேவை​யான உபகரணங்​கள், அதற்​கான கட்​டு​மான பணி​கள் செய்​திருக்க வேண்​டும். அதை செய்​யாமல் மொத்​த​மாக கடந்த ஐந்​தாண்டு காலத்​தில் ரூ.627 கோடி மட்​டுமே செலவு செய்​துள்ளனர்.

சென்​னையை பொறுத்​தவரை 3,500 மெகா​வாட் மட்​டுமே கொள்​திறன் இருக்​கிறது. ஆனால், 5 ஆயிரம் மெகா​வாட் மின்​சா​ரம் மக்​கள் பயன்​படுத்​திக் கொண்டு இருக்​கின்​றனர். புதி​தாக மக்​களுக்கு தேவை​யான மின்​கட்​டமைப்பு பணி​களை கடந்த ஆட்​சி​யில் செய்​ய​வில்​லை. மேக​தாட்டு அணை கட்​டக்​கூ​டாது என்​ப​தில் முதல்​வர் தெளி​வாக இருக்​கிறார். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT