நூறு நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்தை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மேடவாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வைகோ, வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.  | படம்: எம்.முத்துகணேஷ் |

 
தமிழகம்

நூறு நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்தை கண்டித்து திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தித் ​திட்​டத்​தை மத்திய அரசு விபி ஜிராம்​ஜி என பெயர் மாற்றம் செய்துள்ளது. இதை கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினர் காஞ்சி, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் உள்ள வாலாஜா​பாத், உத்​திரமேரூர், குன்​றத்​தூர், பெரும்​புதூர் மற்​றும் காஞ்​சிபுரம் ஆகிய 5 ஒன்​றிய அலு​வல​கங்​கள் முன்​பாக இந்த போராட்​டங்​கள் நடை​பெற்​றன.

வாலாஜா​பாத் பேருந்து நிலை​யம் அருகே நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​திற்கு உத்​திரமேரூர் சட்​டமன்ற உறுப்​பினர் க.சுந்​தர் தலைமை தாங்​கி​னார். இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் 500-க்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர்.

இதே​போல், தாம்​பரம் அடுத்த மேட​வாகத்​தில், திமுக கூட்​டணி கட்சிகள் சார்​பில், திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி தலை​மை​யில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

இந்த ஆர்ப்​பாட்​டத்​தில், திமுக கூட்​டணி கட்சி தலை​வர்​களான கி.வீரமணி, கே.​பால​கிருஷ்ணன், மு.வீர​பாண்​டியன், தொல்​.​திரு​மாவளவன், வைகோ, ஜவாஹிருல்​லா, காதர் மொகை​தீன், தி.வேல்​முரு​கன், ஈ.ஆர்​.ஈஸ்​வரன், மற்​றும் எம்.பி.க்கள் தமிழச்சி தங்​க​பாண்​டியன், கனி​மொழி சோமு மற்​றும் திமுக எம்​எல்​ஏக்​கள், உள்​ளாட்சி பிர​தி​நி​தி​கள் என பலர் கலந்து கொண்​டனர்.

இதே​போல், திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் திமுக மற்​றும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகள் சார்​பில் நேற்று மத்​திய அரசுக்கு எதி​ராக 31 இடங்​களில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

இதில், பூந்​தமல்லி எம்​எல்​ஏ ஆ.கிருஷ்ண​சாமி, திருத்​தணி எம்​எல்​ஏ சந்​திரன், திரு​வள்​ளூர் எம்​எல்ஏ வி.ஜி.​ராஜேந்​திரன், திரு​வள்​ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்​பாளர் ரமேஷ்​ராஜ் உள்​ளிட்ட சுமார் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​று, மத்​திய அரசுக்கு எதி​ராக கண்டன முழக்​கமிட்​டனர்.

இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தித்​திட்​டத்​தை மீட்​டெடுக்​க​வும், தங்​களது வாழ்​வா​தா​ரத்​தைக் காத்​துக்​கொள்​ள​வும் தமிழகம் முழு​வதும் 389 இடங்​களில் திரண்டு ஆர்ப்​பாட்​டத்​தில் பங்​கெடுத்த ஏழை விவ​சாயக் கூலித் தொழிலா​ளர்​கள்.

இது தமிழகத்​தில் இருந்து ஒலிக்​கும் ஒட்​டுமொத்த இந்​திய விவ​சா​யிகளுக்​கான குரல் என்​ப​தை, அண்​ணல் காந்​தி​யின் மீது வெறுப்​புணர்​வோடு செயல்​படும் மத்​திய ஆட்​சி​யாளர்​கள் உணர வேண்​டும்.

ஏழைகளின் வாழ்​வா​தா​ரத்தை உறு​தி​செய்ய வேண்​டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தித்​திட்​டத்​தை காப்​போம். விபிஜிராம்​ஜியை திரும்​ப பெறுங்​கள்​. இவ்​வாறு அதில்​ கூறியுள்ளார்​.

SCROLL FOR NEXT