தமிழகம்

ரயில்வேயில் 2% பணியாளர்களை குறைக்க முடிவு: பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை

செய்திப்பிரிவு

சென்னை: இந்​திய ரயில்​வே​யில் மொத்​தம் உள்ள 14.80 லட்​சம் பணி​யாளர்​கள் எண்​ணிக்​கை​யில், 2 சதவீதம் பணி​யாளர்​களை குறைக்க ரயில்வே வாரி​யம் முடிவு செய்​துள்​ளது. இவற்​றில், தெற்கு ரயில்​வே​யில் மட்​டும் 1,906 பணி​யாளர்​கள் குறைக்​கப்பட உள்​ளனர். இது பயணி​களின் பாது​காப்பை கேள்விக்​குறி​யாக்​கும் என்று ரயில்வே ஊழியர் சங்​கத்​தினர் தெரி​வித்​துள்​ளனர்.

இந்​தி​யா​வில் சாமானிய மக்​கள் முதல் வசதி படைத்​தவர்​கள் வரை அனை​வருக்​கும் ஏற்ற ஒரு பொதுப்​போக்​கு​வரத்து அமைப்​பாக, ரயில் போக்​கு​வரத்து திகழ்​கிறது. குறைந்த கட்​ட​ணம், பாது​காப்​பான பயணம், நீண்ட தூர பயணத்​துக்கு ஏற்​றது போன்ற காரணங்​களால் ரயில்​களில் தினசரி கோடிக்​கணக்​கான மக்​கள் பயணிக்​கின்​றனர்.

இந்​தி​யா​வில் ஆயிரக்​கணக்​கான வழித்​தடங்​களில் 13,000 பயணி​கள் ரயில்​கள் உள்பட தினசரி 22 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்த ரயில்​கள் இயக்​கத்​தில் லட்​சக்​கணக்​கான பணி​யாளர்​கள் முக்​கியப் பங்​காற்றி வரு​கின்​றனர். இந்​நிலை​யில், இந்​திய ரயில்​வே​யில் மொத்​த​முள்ள 14 லட்​சத்து 80 ஆயிரத்து 455 பணி​யாளர்​களில் 2 சதவீதம், அதாவது, 29,608 பணி​யாளர்​களை ரயில்வே நிர்​வாகம் குறைக்க முடிவு செய்​துள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் மட்​டும் 1,906 பணி​யிடங்​களும், சென்னை ஐ.சி.எஃப்​-ல் 217 பணி​யிடங்​களும் குறைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

புதிய பாதை, இரட்டை பாதை மற்​றும் மின்​மய​மாக்​களு​டன் புதி​ய​பாதை அமைக்​கப்​படு​கிறது. இப்​பாதைகளில் வந்தே பாரத், அம்​ரித் பாரத் உள்பட பல்​வேறு நவீன சொகுசு ரயில்​கள் இயக்​கு​வது அதி​கரிக்​கிறது. இந்த ரயில்​களை இயக்​க​வும், ரயில் பாதையை பராமரிக்​க​வும் அதிக பணி​யாளர்​கள் தேவைப்​படும் நிலை​யில், நிர்​வாகச் செல​வு​களை குறைக்​கும் வித​மாக, பணி​யாளர்​கள் குறைப்பு நடவடிக்கை ரயில்வே வட்​டாரத்​தில் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

போதிய பணி​யாளர்​கள் இல்​லாத சூழலில், தற்​போதுள்ள ஊழியர்​களுக்​குப் பணிச்​சுமை அதி​கரிப்​ப​தோடு, ரயில்​களின் இயக்​கம் மற்​றும் பராமரிப்​புப் பணி​களில் தொய்வு ஏற்​படக்​கூடும் என்​றும், இது பயணி​களின் பாது​காப்​பைக் கேள்விக்​குறி​யாக்​கும் என்​றும் ஓய்வு பெற்ற ரயில்வே அதி​காரி​கள் மற்​றும் ரயில்வே ஊழியர்​கள் சங்க நிர்​வாகி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இது குறித்​து, ஓய்​வு​பெற்ற ரயில்வே தொழிற்​சங்க தலை​வர் மனோகரன் கூறிய​தாவது: சிக்கன நடவடிக்​கைக்​காக இதை எடுத்​துள்​ளார்​கள். இது சரி​யான நேரம் அல்ல. வந்தே பாரத் ரயில் உட்பட புதிய ரயில்​களை அறி​முகப்​படுத்தி வரு​கின்​றனர். அதி​க​மான சிறப்பு ரயில்​களும் இயக்​கப்​படு​கின்​றன.

கூடு​தல் பணி​யாளர்​கள் தேவை 98 சதவீதம் அகலப்​பாதை மின்​மய​மாக்​கப்​பட்​டுள்​ளது. இரட்​டைப்​பாதையை அதி​கப்​படுத்​தி​யுள்​ளனர். இப்​பாதைகளை பராமரிக்க கூடு​தல் பணி​யாளர்​கள் தேவைப்​படு​கின்​றனர்.

எனவே, ஊழியர்​கள் எண்​ணிக்கையை அதி​கரிக்க வேண்​டிய சூழல் உள்​ளது. இந்​நேரத்​தில் எண்​ணிக்கையை குறைப்​பதை ரயில்வே துறை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும். பணி​யாளர்​கள் எண்​ணிக்கையை அதி​கரிக்க வேண்​டுமே தவிர, குறைக்​கக்​கூ​டாது. இது பாது​காப்​புக்​கு உகந்​தது அல்​ல. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT