சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் பிரபாகர் வெளியிட்ட அறிக்கை: வீட்டுவசதி வாரியத்தால் மேம்படுத்தப்பட்ட விற்பனைக்குரிய குடியிருப்புத் திட்டங்களுக்கான இணையவழி விண்ணப்பபதிவுக்கு செப். 26 வரை தனித்தனியாக காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
மக்களின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு திட்டத்துக்கும் நிர்ணயிக்கப்பட்ட அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. tnhb.tn.gov.in தளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.