தமிழகம்

உள்ளாட்சி நிதி நிலை ஆய்வுக்கான குழுவுக்கு காலக்கெடு நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: முந்​தைய திமுக ஆட்​சி​யில் கடந்த 2025-ம் ஆண்டு 7-வது மாநில நிதிக் குழு அமைக்​கப்​பட்​டது. அதன் தலை​வ​ராக, ஓய்​வு​பெற்ற ஐஏஎஸ் அதி​காரி அலா​வுதீன் நியமிக்​கப்​பட்​டார்.

இந்த குழு உள்​ளாட்சி அமைப்​பு​களின் நிதி நிலையை மதிப்​பாய்வு செய்​து, மாநில அரசிடம் பரிந்​துரை அறிக்​கையை ஆக.31-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும் என காலக்​கெடு நிர்​ண​யம் செய்​யப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், அதற்​கான காலக்​கெடு டிச.31-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. அரசிதழிலும் இதற்​கான அறிவிக்கை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் உள்ளாட்சி அமைப்​பு​களின் நிதி நிலையை ஆய்வு செய்​து, விரி​வான பரிந்​துரைகளை அரசிடம் சமர்ப்​பிக்க நிதிக் குழு​வுக்கு 4 மாதம் கூடு​தல்​ அவகாசம்​ கிடைத்​துள்​ளது.

SCROLL FOR NEXT