அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி, ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள். | படம்: ம.பிரபு |

 
தமிழகம்

தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்த போராட்டம்: அரசு அலுவலகங்களில் அன்றாட பணிகள் பாதிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி ஜாக்​டோ-ஜியோ சார்​பில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்​டம் நேற்று நடை​பெற்றது. ஊழியர்கள் பணிக்கு வரா​ததால் பல அரசு அலு​வல​கங்​களில் பணி​கள் பாதிக்​கப்​பட்டன.

அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்கு பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ரத்து செய்​து​விட்டு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வது, அரசு துறை​களில் உள்ள காலிப்​பணி​யிடங்​களை நிரப்​புவது என்பன உள்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு ஊழியர்​-ஆசிரியர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பான ஜாக்​டோ-ஜியோ போராடி வரு​கிறது.

இந்​நிலை​யில், ஜாக்​டோ-ஜியோ சார்​பில் சென்னை சேப்​பாக்​கம் எழில​கம் வளாகத்​தில் நேற்று அடை​யாள வேலைநிறுத்​தப் போராட்​டம் நடந்​தது. மாவட்ட ஒருங்​கிணைப்​பாளர்​கள் சாந்​தகு​மார், அந்​தோணி​சாமி ஆகியோர் தலை​மை​யில் நடை​பெற்ற இந்த போராட்​டத்​தில், மாநில ஒருங்​கிணைப்​பாளர்​கள் கு.வெங்​கடேசன், சங்​கரபெரு​மாள், அ,மாய​வன். உள்பட 300-க்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​கள், அரசு பள்ளிஆசிரியர்​கள் பங்​கேற்​றனர். அனை​வரும் எழிலக வளாகத்​தில் பேரணி​யாகச் சென்று கோரிக்​கைகளை நிறைவேற்​றக் கோரி கோஷம் எழுப்​பினர்.

முன்​ன​தாக மாநில ஒருங்​கிணைப்​பாளர் பாஸ்​கரன், செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அதி​முக ஆட்​சிக்​காலத்​தில் எதிர்க்​கட்சி தலை​வ​ராக இருந்​த​ போது திமுக ஆட்சி அமைந்​ததும் அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் அமல்​படுத்​தப்​படும் என்று வாக்​குறுதி அளித்​தார். ஆட்சி முடிய இன்​னும் சில மாதங்​களே உள்​ளன.

ஆனால்,இன்​னும் அரசு ஊழியர்​களின் பிர​தான கோரிக்​கை​யான பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் நடை​முறைப்​படுத்​தப்​பட​வில்​லை. அரசு துறை​களில் உள்ள லட்​சக்​கணக்​கான காலிப் பணி​யிடங்​கள் நிரப்​பப்படவில்​லை.

ஜெயலலிதா முதல்​வ​ராக இருந்​த​போது, கடந்த 2003-ம் ஆண்டு தமிழகத்​தில் அறி​முகப்​படுத்​தப்​பட்ட பங்​களிப்பு ஓய்​வூ​திய திட்​டத்​தில் (சிபிஎஸ்) அரசு ஊழியர்​களின் அடிப்​படைச் சம்​பளம் மற்​றும் அகவிலைப்​படி​யில் இருந்து 10 சதவீதம் பிடித்​தம் செய்​யப்​படு​கிறது.

அதிலிருந்து ஊழியர்​களுக்கு ஓய்​வூ​தி​யம் தரப்பட வேண்​டும். ஆனால், சிபிஎஸ் திட்​டத்​தின்​கீழ் இது​வரை ஓய்​வூ​தி​யம் வழங்​கப்​பட​வில்​லை. இது​வரை சிபிஎஸ் திட்​டத்​தில் பிடித்​தம் செய்​யப்​பட்ட தொகை ரூ.84 ஆயிரம் கோடி.

இதில் 42 ஆயிரம் கோடியை ஜிபிஎஃப் திட்​டத்​தில் வரவு வைத்​து​விட்டு எஞ்​சிய ரூ.42 ஆயிரம் கோடியை எல்​ஐசி-​யில் முதலீடு செய்​தாலே அந்த தொகை​யைக் கொண்டு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் ஓய்​வூ​தி​யம் வழங்​கி​விடலாம். இதனால், அரசுக்கு எந்த நிதிச்​சுமை​யும் ஏற்​ப​டாது.

சிபிஎஸ் திட்​டத்​தில் சேர்ந்த 52 ஆயிரம் குடும்​பங்​கள் ஓய்​வூ​தி​யம் இல்​லாமல் நடுத்​தெரு​வில் நிற்​கின்​றன. எனவே, தமிழக அரசு இனி​யும் கால​தாமதம் செய்​யாமல் உடனடி​யாக பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும்.

இதுதொடர்​பான அறி​விப்பு விரை​வில் வெளி​யிடப்​ப​டா​விட்​டால் ஜாக்​டோ-ஜியோ நிர்​வாகி​கள் கூடி அடுத்​தகட்ட போராட்ட நடவடிக்​கைகள் குறித்து முடிவு செய்​வார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

அன்​றாடப் பணி​கள் பாதிப்பு:

ஜாக்​டோ - ஜியோ வேலை நிறுத்​தப் போராட்​டம் காரண​மாக, சென்னை எழில​கத்​தில் உள்ள அரசு துறை தலைமை அலு​வல​கங்​கள் உள்பட பல்​வேறு அலு​வல​கங்​களில் ஊழியர்​கள்பணிக்கு வராத​தா​லும் குறைந்த எண்​ணிக்​கை​யில் பணிக்கு வந்​த​தாலும் பல அலு​வல​கங்​கள் வெறிச்​சோடி காணப்​பட்​டன. தலை​மைச் செயல​கத்​தி​லும் பணி​கள் பாதிக்கப்பட்டன. இதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

SCROLL FOR NEXT