‘டிட்வா’ புயல் காரணமாக சீற்றத்துடன் காணப்படும் பாம்பன் கடல் பகுதி. படம்: எல்.பாலச்சந்தர்

 
தமிழகம்

வடதமிழகம், புதுச்சேரியை நோக்கி நகர்கிறது ‘டிட்வா’ புயல்: 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்

செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: இலங்கை பகு​தி​யில் இருந்து வடமேற்​காக நகர்ந்து வரும் ‘டிட்​வா’ புயல் நாளை அதி​காலை வட தமிழகம், புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களுக்கு அருகே நில​வக்​கூடும். இதன் காரண​மாக, டெல்டா மற்​றும் அதை ஒட்​டிய கடலோர மாவட்​டங்​கள், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்​ச​மாக மணிக்கு 90 கி.மீ. வேகத்​தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்​சரித்​துள்​ளது. மயி​லாடு​துறை, கடலூர், விழுப்​புரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் அதி​க​னமழைக்​கான ‘ரெட் அலர்ட்’ எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் செந்​தாமரை கண்​ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​மேற்கு வங்​கக்​கடல், அதை ஒட்​டிய இலங்கை கடலோரப் பகு​தி​களில் நில​விய ‘டிட்​வா’ புயல், இலங்கை திரி​கோண மலை​யில் இருந்து தென்மேற்கே சுமார் 40 கி.மீ., சென்​னை​யில் இருந்து தெற்கே 530 கி.மீ. தொலை​வில் நிலை​கொண்​டுள்​ளது.

இது வடமேற்​காக நகர்ந்​து, இலங்கை கடலோரப் பகு​தி​கள் மற்​றும் அதை ஒட்​டிய தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களைக் கடந்து நவ.30 (நாளை) அதி​காலை வங்​கக்​கடல் பகு​தி​களில் வட தமிழகம் - புதுச்​சேரி மற்​றும் அதை ஒட்​டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகு​தி​களுக்கு அருகே நில​வக்​கூடும்.

இதன் காரண​மாக வட தமிழகத்​தில் இன்​றும், நாளை​யும் (நவ.29, 30) பெரும்​பாலான இடங்களி​லும், தென் தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

இன்று டெல்டா மற்​றும் அதை ஒட்​டிய கடலோர மாவட்​டங்​கள், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்​ச​மாக மணிக்கு 90 கி.மீ. வேகத்​தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்​கூடும். இதர கடலோர மாவட்​டங்களில் அதி​கபட்​ச​மாக 75 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​திகளுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம். மயி​லாடு​துறை, கடலூர், விழுப்​புரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் அதி​க​னமழை (‘ரெட் அலர்ட்’) பெய்​யக்​கூடும்.

புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், அரியலூர், பெரம்​பலூர், திருச்​சி, சேலம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்ணா​மலை, காஞ்​சிபுரம், சென்னை, திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​கள், காரைக்​கால் பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், வேலூர், திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி, நாமக்​கல், கரூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்​யக்​கூடும்.

நாளை டெல்​டா, தென் தமிழக கடலோர மாவட்​டங்​கள், காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்​ச​மாக 75 கி.மீ. வேகத்​தி​லும், இதர வட தமிழக கடலோர மாவட்டங்​கள், புதுச்​சேரி​யில் 80 கி.மீ. வேகத்​தி​லும் பலத்த காற்று வீசக்கூடும். திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் ஒரு சில இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ஓரிரு இடங்களில் அதி​க​னமழை​யும், சென்னை, காஞ்​சிபுரம், வேலூர், செங்​கல்பட்​டு, திருப்​பத்தூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி மாவட்​டங்​களில் கன முதல் மிக கனமழை​யும், சேலம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம் மாவட்​டங்​கள், புதுச்​சேரி​யில் கனமழை​யும் பெய்ய வாய்ப்பு உள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

ரயில்​கள் நிறுத்​தம்: ‘டிட்​வா’ புயலின் தாக்​கத்தால் ராமேசுவரம் தீவு பகு​தி​யில் பலத்த காற்​றுடன் தொடர்ந்து மழை பெய்து வரு​கிறது. இதனால், பாம்​பன் பாலத்​தில் நேற்று ரயில் போக்​கு​வரத்​துக்கு தடை விதிக்​கப்​பட்​டு, ராமேசுவரத்​துக்கு ரயில் சேவை நிறுத்​தப்​பட்​டது. பாசஞ்​சர் ரயில்​கள் ராம​நாத​புரம் வரை​யும், விரைவு ரயில்​கள் மண்​டபம் வரை​யும் இயக்​கப்​பட்​டன.

பள்ளிகளுக்கு விடுமுறை: இந்நிலையில், அதிகனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (நவ.29) விடுமுறை விடப்பட்டுள்ளது சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT