பெ.சண்முகம் | கோப்புப் படம். 
தமிழகம்

திமுக அணியில் பேச்சுவார்த்தை தாமதம் ஏன்? - பெ.சண்முகம் விளக்கம்

செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் நிதியளிப்பு மற்றும் சிறப்பு பேரவைக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார்.

முன்னதாக அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்​தி​யாவை அடிமைப்​படுத்த வேண்​டும் என்ற கெட்ட நோக்​கத்​துடன் செயல்​படு​வதுடன் 500 சதவீத வரி விதிக்​கும் அமெரிக்க அரசை கண்​டித்து கோவை, திருப்​பூர், ஈரோடு, ஓசூர், கரூர், சென்னை உட்பட 10 இடங்​களில் வரும் 22-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெற உள்​ளது.

தங்​களுக்கு எதி​ரான​வர்​களை, தங்​களது வழிக்கு கொண்டு சாம, பேத, தான, தண்ட என்ற அனைத்து வழி​முறையை பாஜக கடை​பிடிக்​கிறது. வரு​மான வரித்​துறை, அமலாக்​கத் துறை, சிபிஐ-யை தொடர்ந்து தணிக்கை துறையை ஆயுத​மாக பயன்​படுத்​துகிறது. ஜனநாயகன் படக்​குழு​வுக்கு ஆதர​வாக, தவெக தலை​வர் விஜய் வாய் திறக்​காமல் இருக்​கி​றார். பாஜகவை பகைத்து கொள்​ளக்​கூ​டாது என்​ப​தற்​காக விஜய் மவுன​மாக இருக்​கி​றாரோ என்ற கேள்வி எழுகிறது.

திமுக தலை​மையி​லான அணி​யில் தொடர்​கி​றோம். கூட்​ட​ணிக்கு சில கட்​சிகள் வர இருப்​ப​தால், பேச்​சு​வார்த்தை தொடங்​கு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. பாஜக, அதி​முகவை தோற்​கடிக்க வேண்​டும் என்​ப​தில் உறு​தி​யாக இருக்​கி​றோம். இரட்டை இலக்​கத்​தில் போட்​டி​யிடு​வோம். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மையி​லான அமைச்​சர​வை​யில் பங்​கேற்​போம்.

பிற கட்சி தலை​மையி​லான அமைச்​சர​வை​யில் பங்​கேற்க மாட்​டோம். இதற்கு எடுத்​துக்​காட்டு கேரள மாநிலம். இது கொள்கை ரீதி​யான முடிவு. ‘ஆட்​சி​யில் பங்​கு’ என்ற முழக்​கம் அதி​கம் உள்​ளது. தேர்​தலுக்கு பிறகு​தான், ‘ஆட்​சி​யில் பங்​கு’ என்ற சூழல் முடிவு செய்​யப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

கூட்​டத்​தில் தேர்​தல் நிதி​யாக சண்​முகத்​திடம் மாவட்ட செய​லா​ளர் சுப்​ரமணி​யன் ரூ.12 லட்​சம் வழங்​கி​னார். மாநில செயற்​குழு உறுப்​பினர் ரவீந்​திரன் உட்பட பலர் கலந்​து​கொண்​டனர்​.

SCROLL FOR NEXT