உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

 
தமிழகம்

100 நாட்களாக பிரேத கிடங்கில் இருக்கும் மானாமதுரை இளைஞர் உடலை பெற நீதிமன்றம் கெடு

செய்திப்பிரிவு

மதுரை: ​போலீ​ஸில் பிடிப​டா​மல் இருக்க தப்​பிய​போது தவறி விழுந்து காயமடைந்து உயி​ரிழந்ததாக கூறப்படும் மானாமதுரை இளைஞரின் உடல் 100 நாட்களாக பிரேத கிடங்கில் உள்ள நிலையில், உறவினர்கள் உடலைப் பெற்று அடக்கம் செய்ய உயர் நீதி​மன்​றம் கெடு விதித்​துள்ளது.

சிவகங்கை மாவட்​டம், மானாமதுரை​யில் சாலை​யில் நடந்து சென்​றவர்​களை அரி​வாளால் வெட்​டிய​தாக ஆகாஷ் (26) என்​பவரை போலீ​ஸார் கைது செய்​தனர். முன்​ன​தாக, போலீ​ஸில் பிடிப​டா​மல் இருக்க தப்பி ஓடிய​போது, ஆகாஷ் தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்​பட்​ட​தாகக் கூறி, சிகிச்​சைக்​காக அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

ஆனால், ‘ஆகாஷை போலீ​ஸார் கொலை செய்​துள்​ளனர். இதனால் போலீ​ஸார் மீது கொலை வழக்​குப் பதிய வேண்​டும், வழக்கு விசா​ரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்​டும், இழப்​பீடு வழங்க வேண்​டும்’ என வலி​யுறுத்​தி, அவரது தந்தை ராஜேஷ்கண்​ணன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் வழக்கு தொடர்ந்​தார். இந்த மனு நீதிபதி எல்​.விக்​டோரியா கெளரி முன் விசா​ரணைக்கு வந்​த​போது, ஆகாஷ் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்​றப்​பட்​டது.

வழக்​கில் எஸ்​சி, எஸ்​டி வன்​கொடுமை பிரிவை​யும் சேர்க்​கவும் நீதிபதி உத்​தர​விட்​டார். இதையடுத்​து, ஆகாஷ் உடல் பிரேதப் பரிசோதனை செய்​யப்​பட்​டது. இருப்பினும், அவரது பெற்​றோர் உடலை வாங்க மறுத்​து​விட்​டனர். இதனால், ஆகாஷின் உடல் 100 நாட்​களாக மதுரை அரசு மருத்​து​வக் கல்​லூரி பிரேதப் பரிசோதனைக் கிடங்​கில் வைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் நீதிப​தி, காவல்மரண வழக்​கு​களில் அதி​காரிகள் விதி​முறை​களை கடைபிடிக்க வேண்​டும். ஆகாஷ் மரணம் தொடர்​பான வழக்கை சிபிசிஐடி விரைந்து விசா​ரித்து குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டார். இந்த மனு நீதிபதி எல்​.விக்​டோரியா கெளரி முன் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி, மனு​தா​ரர் கோரிக்​கைகள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன.

இருப்​பினும், தற்​போது வரை மனு​தா​ரர் அவர் மகன் உடலை பெறாமல் இருப்​பது ஏற்​கத்​தக்​கது அல்ல. எனவே, ஆகாஷின் உடலை அவர் பெற்​றோர் இன்று (நேற்​று) மாலை 5 மணிக்​குள் பெற்​றுக்​கொள்ள வேண்​டும். தவறி​னால் நாளை (இன்​று) போலீ​ஸாரே ஆகாஷ் உடலை அடக்​கம் செய்ய உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும். விசா​ரணை 16-ம் தேதிக்கு (இன்​றைக்​கு) தள்​ளிவைக்​கப்​படு​கிறது என உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT