தமிழகம்

234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் காங்கிரஸில் இன்று முதல் விருப்பமனு விநியோகம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் சட்டப்பேரவை தேர்​தலில் போட்​டி​யிடு​வதற்​காக 234 தொகு​தி​களுக்கும் இன்று முதல் விருப்​பமனு விநி​யோகம் செய்​யப்​படும் என மாநில தலை​வர் செல்​வப்​பெருந்​தகை அறி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில் திமுக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் காங்​கிரஸ் கட்சி தொகு​திப்​பங்​கீடு குறித்து பேச்​சு​வார்த்தை நடத்த குழு அமைத்​துள்ளது.

இந்நிலையில் செல்வப் பெருந்தகை வெளி​யிட்ட அறிக்​கை: 2026-ம் ஆண்டு நடை​ பெறவுள்ள தமிழக சட்​டப் பேரவை தேர்​தலில் காங்​கிரஸ் சார்​பில் போட்​டி​யிட விரும்​பும் கட்சி உறுப்​பினர்​களிட​மிருந்து 234 சட்டப்பேரவை தொகு​தி​களுக்​கும் விருப்ப மனுக்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

கட்​டணமில்லா விருப்ப மனு படிவத்தினை இன்று முதல் டிச.15-ம் தேதி வரை கட்சி தலைமை அலு​வல​கத்​திலோ அல்​லது மாவட்ட காங்​கிரஸ் கமிட்டி அலு​வல​கத்​திலோ பெற்​றுக் கொள்​ளலாம். ஆன்​லைனிலும் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம்.

விருப்​பமனு படிவத்​தில் கேட்​கப்​பட்​டுள்ள அனைத்து விவரங்​களை​யும் பூர்த்தி செய்​து, தனி​யாக இணைக்​க வேண்​டிய இதர விபரங்களை இணைத்து டிச. 15-ம் தேதி மாலை 5 மணிக்​குள் கட்சி தலை​மையக​மான சத்தி​யமூர்த்தி பவன் அல்​லது மாவட்ட காங்​கிரஸ் கமிட்டி அலு​வல​கத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு கூறி​யுள்ளார்.

SCROLL FOR NEXT