ஜி.கே மூப்பனாரின் 25-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். படம்: எஸ்.சத்தியசீலன்

 
தமிழகம்

மூப்பனார் நினைவு இடத்தில் மரியாதை: ஒரே மேடையில் தமாகாவுடன் இணைந்த காங்கிரஸ் தலைவர்கள்

செய்திப்பிரிவு

சென்னை: மூப்​ப​னார் நினை​விடத்​தில் 12 ஆண்​டு​களுக்​குப் பிறகு காங்​கிரஸ் தலை​வர்​கள் தமாகா தலை​வர் ஜி.கே.​வாசனுடன் ஒரே மேடை​யில் சங்​கமித்​திருப்​பது தமிழக அரசி​யலில் புதிய கூட்​ட​ணிக் கணக்​கு​களுக்​கான தொடக்​க​மாக பார்க்​கப்​படு​கிறது.

தமிழ் மாநில காங்​கிரஸ் (தமா​கா) நிறு​வனர் ஜி.கே.மூப்​ப​னாரின் 25-வது நினைவு தினத்​தையொட்​டி, சென்னை தேனாம்​பேட்டை காம​ராஜர் அரங்​கம் அருகே அமைந்​துள்ள மூப்​ப​னார் நினை​விடம் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்​தது. தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், கட்​சி​யின் மாநில பொதுச்​செய​லா​ளர் ஜி.ஆர்​.வெங்​கடேஷ், துணைத் தலை​வர்​கள் விடியல் சேகர், முனவர் பாஷா, சக்தி வடிவேல் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் மலர்​வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தினர். தமிழக அரசின் சார்​பில் மீன்​வளத்​துறை அமைச்​சர் ஸ்ரீநாத் மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

இதைத் தொடர்ந்து தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர், காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் கே.​வி.தங்​க​பாலு, பீட்​டர் அல்​போன்​ஸ், மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ, முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ, பாஜக மூத்த தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் முன்​னாள் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மூத்த தலை​வர் டி.கே.ரங்​க​ராஜன், விசிக முன்​னாள் எம்​எல்ஏ எஸ்​.எஸ்​.​பாலாஜி, தமிழருவி மணி​யன், பெருந்​தலை​வர் மக்​கள் கட்சி தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன் உள்​ளிட்ட பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​கள் நேரில் வந்து மரி​யாதை செலுத்​தினர். தொடர்ந்து ஒரே மேடை​யில் மூப்​ப​னாருக்கு புகழஞ்​சலி செலுத்​தினர்.

நிகழ்​வின் ஒரு பகு​தி​யாக, பொது​மக்​களுக்கு அன்​ன​தானம் வழங்​கப்​பட்​டது. பள்ளி மாணவர்​களுக்கு கல்வி உதவித்​தொகை, ஏழை எளிய மக்​களுக்​குத் தையல் இயந்​திரங்​கள், மூன்று சக்கர வண்​டிகள், வேட்​டி, சேலைகள் உள்​ளிட்ட நலத்​திட்ட உதவி​களை ஜி.கே.​வாசன் வழங்​கி​னார்.

காங்​கிரஸிலிருந்து தமாகா பிரிந்து சென்ற பிறகு இரு கட்​சிகளும் தனித்​தனிப் பாதை​யில் பயணித்து வந்த சூழலில், “காங்​கிரஸுடன் இணைந்து செயல்​படு​வோம்” என்று ஜி.கே.​வாசன் அண்​மை​யில் தெரி​வித்​திருந்​தார்.

அதன் தொடர்ச்​சி​யாக, 12 ஆண்​டு​களுக்​குப் பிறகு தமாகா தலைமை அலு​வல​கத்​தில் முன்​னாள் பிரதமர் ராஜீவ் காந்​தி​யின் படத்​துக்கு வாசன் மரி​யாதை செலுத்​தி​னார். தற்​போது மூப்​ப​னார் நினை​விடத்​தில் காங்​கிரஸ் தலை​வர்​கள் திரண்டு வந்து அஞ்​சலி செலுத்​தி, ஒரே மேடை​யில் சங்​கமித்​திருப்​ப​தன் மூலம் இரு கட்​சிகளுக்கு இடையி​லான இணக்​கம் மேலும் உறு​தி​யாகி​யுள்​ளது.

கடந்த ஆண்டு பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் தமாகா இருந்​த​போது பாஜக மற்​றும் அதி​முக​வின் முக்​கி​யத் தலை​வர்​கள் இந்​நிகழ்​வில் பங்​கேற்​றிருந்த நிலை​யில், இந்த முறை அவர்​கள் எவரும் கலந்​து​கொள்​ள​வில்​லை.

மாறாக தவெக கூட்​ட​ணி​யில் உள்ள காங்​கிரஸ், மதி​முக, விசிக உள்​ளிட்ட கட்​சிகளின் தலை​வர்​கள் இதில் பெரு​மள​வில் பங்​கேற்​றிருப்​பது தமிழக தேர்​தல் களத்​தில் தவெக தலை​மையி​லான புதிய கூட்​ட​ணிக் கணக்​கு​களுக்கு தொடக்​க​மாக​வும், அதில் தமாகா​வும் இடம்​பெறு​வதற்​கு​மான வலு​வான சமிக்​ஞை​யாக​வும்​ அரசி​யல்​ வட்​டாரங்​களில்​ ​பார்​க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT