தமிழகம்

தோல்வி குறித்து ஆராய காங்கிரஸில் 5 பேர் கொண்ட ‘உண்மை கண்டறியும் குழு’

செய்திப்பிரிவு

சென்னை: நடந்து முடிந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலில் தமிழக காங்​கிரஸின் தோல்வி குறித்து விரி​வாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட உண்மை கண்​டறி​யும் குழு அறி​விக்கப்பட்டுள்​ளது.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் கட்சி 28 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. முடி​வில் வெறும் 5 தொகு​தி​களில் மட்​டுமே அக்​கட்சி வெற்​றி​பெற்று சரிவைச் சந்​தித்​தது.

இந்​தத் தோல்விக்கு கட்​சி​யின் உள்​ளூர் நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​கள் பல தொகு​தி​களில் முறை​யாகத் தேர்​தல் பணி​யாற்​றாததும், சொந்​தக் கட்​சி​யின் வேட்​பாளர்​களை வீழ்த்​தும் நோக்​கில் கட்சி விரோத செயல்​களில் சிலர் ஈடு​பட்​டது​தான் முக்​கியக் காரணம் என அடுக்​கடுக்​கான புகார்​கள் டெல்லி தலை​மைக்​குச் சென்​றன.

இதையடுத்​து, தேர்​தல் தோல்வி மற்​றும் புகார்​கள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்​ப​தற்​காக, தமிழக காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் பிரத்​தி​யேக குழுவை அமைத்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அதி​காரப்​பூர்வ அறி​விப்​பில், “தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் கட்​சி​யின் வெற்றி வாய்ப்பை பாதிக்​கும் வகை​யில், கட்சி விரோத நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டோரை கண்​டறிந்து நடவடிக்கை எடுக்க இந்த உண்மை கண்​டறி​யும் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த குழு​வில் தலை​வ​ராக முன்​னாள் எம்​.பி. ஜெயக்​கு​மார் செயல்​படு​வார். தமிழக காங்​கிரஸ் துணைத் தலை​வர்​கள் சொர்ணா சேது​ராமன், சி.டி.மெய்​யப்​பன், கமலிகா காம​ராஜர் ஆகியோர் உறுப்​பினர்​களாக இடம்​பெற்​றுள்​ளனர்” எனத் தெரி​வித்​துள்​ளார்.

இக்​குழு​வினர் விரை​வில் பாதிக்​கப்​பட்ட தொகு​தி​களுக்கு நேரில் சென்று வேட்​பாளர்​கள் மற்​றும் உள்​ளூர் நிர்​வாகி​களிடம் விசா​ரணை நடத்​தி, தங்​கள் இறுதி அறிக்​கையை டெல்லி மேலிடத்​திற்கு சமர்ப்​பிக்க உள்​ளனர். இதன் அடிப்​படை​யில் கட்​சிப் பணியை சரி​யாக செய்​யாதவர்​கள் மீது கடுமை​யான ஒழுங்கு நடவடிக்​கை பா​யும்​ எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT