பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை நேற்று நிறுத்தப்பட்டதால், பூங்கா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் கூட்டம். | படம்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் 41 மின்சார ரயில்கள் ரத்தால் பயணிகள் அவதி: பேருந்து, மெட்ரோ ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: கடற்கரை - தாம்​பரம் மார்க்​கத்​தில் நேற்று 41 மின்​சார ரயில் சேவை​கள் ரத்​தால், பயணி​கள் கடும் சிரமத்தை சந்​தித்​தனர். அதே​ நேரத்​தில், பேருந்து மற்​றும் மெட்ரோ ரயில் நிலை​யங்​களை நோக்கி மக்​கள் சென்​ற​தால், அங்கு கூட்​டம் அலை மோதி​யது.

சென்னை கடற்​கரை - தாம்​பரம் ரயில் நிலை​யங்​களுக்கு இடையே பராமரிப்பு பணி காரண​மாக, 41 மின்​சார ரயில்​களின் சேவை​கள் ஞாயிற்​றுக்​கிழமை ரத்து செய்​யப்​படு​வ​தாக ரயில்வே நிர்​வாகம் அறி​வித்​தது.

அதன்​படி, நேற்று காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை ரயில்​களின் சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. அந்த நேரத்​தில், ரயில்வே ஊழியர்​கள் தண்​ட​வாள பராமரிப்பு பணியை மேற்​கொண்​டனர்.

இதற்​கிடை​யில், நேற்று ஞாயிற்​றுக்​கிழமை விடு​முறை தினம் என்​ப​தால், ரயில் ரத்து அறி​விப்​பால் பயணி​கள் பல்​வேறு இன்​னல்​களை சந்​தித்​தனர். காலை 10.30 மணிக்கு மேல் ரயில்​கள் ரத்து செய்​யப்​படு​வதை முன்பே அறிந்​து, பணிக்கு செல்​பவர்​கள் மற்​றும் சொந்த வேலைக்​காக செல்​பவர்​கள் முன்​ன​தாக திட்​ட​மிட்டு ரயில் நிலை​யங்​களுக்கு சென்​றனர்.

இதனால், காலை நேரங்​களில் தாம்​பரம், எழும்​பூர் உள்பட பல ரயில் நிலை​யங்​களில் கூட்​டம் அலைமோ​தி​யது. இதன்​பின், ரயில் ரத்​தானது தெரி​யாமல் பலர் ரயில் நிலை​யங்​களுக்கு சென்​றனர்.

பின்​னர், ரயில் ரத்து குறித்த அறி​விப்பை கேட்​டு, அவர்​கள் பேருந்து மற்​றும் மெட்ரோ நிலை​யங்​களுக்கு சென்​றனர். இதனால், அங்கு கூட்​டம் வழக்​கத்தை விட அதி​கரித்​தது.

மின்​சார ரயில் ரத்​தால், தாம்​பரம் பேருந்து நிலை​யத்​தில் கூட்​டம் அலைமோ​தி​யது. மேலும், சில பயணி​கள் தங்​கள் கார் மற்​றும் இருசக்கர வாக​னங்​களில் வெளியே சென்று வந்​ததை காண முடிந்​தது. இதனால், தாம்​பரம் ஜிஎஸ்டி சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நில​வியது.

இது​போல, தாம்​பரம் - செங்​கல்​பட்டு இடையே ஒரு மணி நேரத்​துக்கு இடையே சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​பட்​ட​தால், அந்த ரயில்​களில் பயணி​கள் கூட்​டம் நிரம்பி வழிந்​தது. பலர் படிக்​கட்டுகளில் தொங்​கியபடி ஆபத்​தான வகை​யில் பயணித்​தனர்.

தொடர்ந்​து, மாலை 3.30 மணிக்கு மேல் மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படும் என்ற தகவல் அறிந்து மாலை 3 மணி முதலே ரயில் நிலை​யத்​தில் ரயிலுக்​காக பயணி​கள் காத்​திருந்​தனர். மாலை 4 மணி முதல் வழக்​கம்​போல மின்​சார ரயில்​கள் இயக்​கப்​பட்​டன.

SCROLL FOR NEXT