தமிழகம்

அமெரிக்க வரி விதிப்பை கண்டித்து 23-ம் தேதி சென்னை, கோவை, திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘அமெரிக்​கா​வின் வரி விதிப்​பைக் கண்​டித்து சென்​னை, கோவை, திருப்​பூர், ஈரோட்​டில் ஜன.23-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும்’ என இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் அறி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மத்​திய, மாநில தனி​யார் பல்​கலைக்​கழகங்​களுக்கு துணைவேந்​தர்​களை நியமிக்​கும் அதி​காரம் மத்​திய அரசிடம் மட்​டுமே இருக்​கும் வகை​யில் சட்ட வரைவு தயாரிக்​கப்​பட்டிருப்பது மாநில உரிமைகள் மீது தொடுக்​கப்​படும் தாக்குதலாகும்.

ஆளுநரின் தவறான செய்​கைகளுக்கு நாட்​டின் குடியரசு தலை​வரும் துணை போவது அதிர்ச்​சி​யளிக்​கிறது. இலங்​கை​யில் தமிழர்​களுக்​குப் பயன் கிடைக்​கும் வகை​யில் கூட்​டாட்சி முறையி​லான அதி​காரப் பகிர்வு உறுதி செய்​யப்பட வேண்​டும்.

இந்​தி​யப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த 500 சதவீத வரி விதிப்​பால் திருப்​பூர், கோவை போன்ற தொழில் நகரங்​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​படும். இதைக் கண்​டித்து கோவை, திருப்​பூர், ஈரோடு, சென்னையில் ஜன.23-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும்.

மேலும், புதிய தொழிலா​ளர் சட்ட தொகுப்​பு​கள் உட்பட தொழிலா​ளர்​கள் மீது தொடர்ந்து தாக்​குதல் நடத்தி வரும் மத்​திய அரசைக் கண்​டித்து பிப்​.12-ல் நடை​பெறவுள்ள அனைத்து தொழிற்​சங்​க பொது வேலைநிறுத்​தத்​துக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் ஆதரவளிக்கும்.

பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜாவுக்கு மலை​யேற விருப்​பம் இருக்​கிறது என்​றால் இமயமலைக்கு சென்று பயிற்சி எடுத்​து, இமயமலையை ஏறி இறங்​கலாம். ஏன் திருப்​பரங்​குன்​றத்​தில் மட்​டும் ஏற நினைக்​கிறார். இந்த பதற்ற அரசி​யல் அவர்​களுக்கு கைகொடுக்​காது. தமிழகத்​தின் ஆட்​டமே வேறு. இவ்​வாறு கூறி​னார்​.

SCROLL FOR NEXT