தமிழகம்

ஒரே நாளில் கூடிய ஃபாலோயர்கள் - உச்சம் தொடும் தமிழக முதல்வரின் இன்ஸ்டாகிராம் பக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் புதிய மைல்கற்களை எட்டி வருகின்றன.

தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கமான @cmotamilnadu கடந்த 9-ம் தேதி வரை 4 லட்சம் ஃபாலோவர்ஸ்களுடன் இயங்கி வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தவெக தலைவர் விஜய், தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, அந்தப் பக்கத்தைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து 10 லட்சத்தை, அதாவது ஒரு மில்லியனை தொட்டிருக்கிறது.

குறிப்பாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் திரண்டது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அரசுத் தரப்பில் நிர்வகிக்கப்படும் ஒரு சமூக வலைதளப் பக்கம், மிகக் குறுகிய காலத்தில், ஒரே நாளில் 6 லட்சம் புதிய பின்தொடர்பாளர்களை பெற்று, புதிய உச்சத்தை எட்டியிருப்பது ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், புதிய அரசின் மீதான இளைஞர்களின் எதிர்பார்ப்பையும், டிஜிட்டல் தளங்களில் நிலவும் ஆர்வத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி, ‘எக்ஸ்’ மற்றும் ‘ஃபேஸ்புக்’ ஆகிய தளங்களிலும் முதல்வர் அலுவலக பக்கங்களை பின்தொடர்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT