தமிழகம்

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் விஜய் தான் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய் இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தார்.

இதையடுத்து, முதல்வர் விஜய் கடந்த 10-ம் தேதி திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் திருச்சி கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்தது. இதுதொடர்பான அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழில் வெளியாகியுள்ளது.

பொதுவாக, ஒரு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, வரும் நவம்பருக்குள் திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக, திமுக யாரை வேட்பாளராக நிறுத்தவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT