முதல்வர் ஸ்டாலின்

 
தமிழகம்

“எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்” - முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தேர்​தலில் எத்​தனை முனை போட்டி வந்​தா​லும் திமுக கூட்​டணி வெற்றி பெறும் என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார்.

சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் திமுக வேட்​பாளர் பட்​டியலை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று வெளி​யிட்​டார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அதி​முக முன்​னாடியே வேட்​பாளர்​களை அறி​வித்து விட்​டார்​களே, திமுக இன்​னும் அறிவிக்க வில்​லையே என்று கேட்​கின்​றனர், நாங்​கள் கொஞ்​சம் லேட்டா வந்​தா​லும், லேட்​டஸ்ட்டா வந்​திருக்​கிறோம்.

          

ஏனென்​றால் கூட்​ட​ணி​யில் பல கட்​சிகள் இருக்​கின்​றன. அனைத்து கட்​சிகளு​ட​னும் உட்​கார்ந்து பொறுமை​யாக பேசி, இடையூறுகளை களைந்​து, எல்​லோரை​யும் திருப்தி செய்​து, இடங்​களை ஒதுக்​கீடு செய்​திருக்​கிறோம். அதற்​காக​தான் நேரம் ஆகி​யிருக்​கிறது.

மகா கூட்​ட​ணி​: கடந்த 2021 தேர்​தலை ஒப்​பிடும்​போது தேமு​திக உள்​ளிட்ட புதிய கட்​சிகள் கூட்​ட​ணிக்​குள் வந்​துள்​ளன. அதன்​படி, பார்த்​தால் முதலில் இருந்​தது மகா கூட்​ட​ணி. இப்​போது அது மகா, மகா கூட்​ட​ணி​யாக மாறி​யிருக்​கிறது. தேர்​தல் அறிக்கை நாளை (இன்​று) மாலை வெளி​யிடப்​படும்.

தேர்​தல் பிரச்​சா​ரத்தை 31-ம் தேதி முதல் தொடங்க இருக்​கிறேன். துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் 31-ம் தேதி​யும், திமுக துணை பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி 30-ம் தேதி​யும் தொடங்​க​வுள்​ளனர்.

பெண்​களுக்கு பாது​காப்பு இல்லை என பழனி​சாமி கூறிவரு​கிறார். அவர் அப்​படித்​தான் சொல்​வார். ஏனென்​றால் திமுக ஆட்​சி​யில் சாதனை​கள் செய்​ய​வில்லை என்று அவரால் சொல்ல முடி​யாது. வேறு ஒன்​றும் குறை சொல்​வதற்கு வழி இல்​லாத​தால் இதை திருப்​பித் திருப்பி சொல்​லிக் கொண்​டிருக்​கிறார். தேர்​தலுக்​கான பணி​களை நாடாளு​மன்ற தேர்​தல் முடிந்த உடனே ஆரம்​பித்​து​விட்​டோம். அடுத்த 5 ஆண்​டு​களுக்​கான திட்​டங்​கள் தேர்​தல் அறிக்​கை​யில் அறிவிக்​கப்​படும்.

சீட் கிடைக்​காதவர்​களுக்கு நான் சொல்ல விரும்​புவது, “அண்ணா அடிக்​கடி சொல்​வார், ஒரு கல்​யாணத்​துக்கு போகும்​போது ஒரு பட்​டுப்​புட​வையை​தான் கட்​டிட்டு போக முடி​யும். பீரோ​வில் இருக்​கிற எல்லா பட்​டுப்​புட​வை​யும் கட்​டிட்டு போக முடி​யாது. அடுத்த கல்​யாணத்​துக்கு அந்த பட்​டுப்​புட​வையை கட்​டிட்டு போவோம் என்​று அதைத்​தான் நானும் சொல்​கிறேன். இந்த தேர்​தலில் எத்​தனை முனை போட்டி வந்​தா​லும் தி​முக கூட்​ட​ணி மாபெரும்​ வெற்​றி​பெறும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT