நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர். | படங்கள்: மு.லெட்சுமி அருண் |

 
தமிழகம்

“டெல்லியில் இருந்து ஒருபோதும் தமிழகத்தை ஆளும் நிலை வரக்கூடாது” - முதல்வர் ஸ்டாலின் கருத்து

எல்.மோகன்

நாகர்கோவில்: டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆளும் நிலை ஒருபோதும் ஏற்​படக் கூடாது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார்.

நாகர்​கோ​வில் கன்​கார்​டியா பள்ளி மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற அரசு விழா​வில் ரூ.1,785.37 கோடி மதிப்​பில் 1,217 முடிவுற்ற திட்​டப் பணி​களை திறந்​து​வைத்​தும், 1,237 புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​யும், 3,12,082 பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கி​யும் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது:

          

நான் 50 ஆண்​டு​கள் தொடர் உழைப்​பால் பேரியக்​கத்​தின் தலை​வர் என்ற பொறுப்பை அடைந்​திருக்​கிறேன். வாக்​களித்த மக்​களுக்கு மட்​டுமின்​றி,

வாக்​களிக்​காத மக்​களுக்​கும் சேர்த்​து​தான் உழைக்​கிறேன். ஆனால், தேர்​தல் நேரத்​தில் மட்​டும் சிலர் மக்​களை வட்​டமடிப்​பார்​கள். தேர்​தல் சீசனில் பிரதமர் மோடி அடிக்​கடி தமிழகத்​துக்கு வரு​வார்.

ஏற்​கெனவே வரத் தொடங்​கி​விட்​டார். இதனால் அவரது கூட்​ட​ணிக் கட்​சி​யினரே பயப்​படு​கிறார்​கள். எத்​தனை முறை பிரதமர் இங்கு வரு​கிறாரோ, அந்த அளவுக்கு பெரிய வித்​தி​யாசத்​தில் தேசிய ஜனநாயக கூட்​டணி தோல்வி அடை​யும். ஏனெனில், தமிழகத்​துக்கு பிரதமர் ஒன்​றுமே செய்​ய​வில்லை என்​பது மக்​கள் ஞாபகத்​துக்கு வரும்.

மத்​திய அமைச்​சர​வைக் கூட்​டத்​தில், குஜ​ராத் மாநில மெட்ரோ திட்​டத்​துக்கு ஒப்​புதல் வழங்​கி​யிருக்​கிறார்​கள். ஆனால், தமிழகத்​துக்கு ஏது​மில்லை. வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் போட்டி தமிழகத்​துக்​கும், தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்​கும்​தான். செயின்ட் ஜார்ஜ் கோட்​டை​யில் இருந்​து​தான் தமிழகம் ஆளப்பட வேண்​டும்.

டெல்லியில் இருந்து ஆளும் நிலை வரக்​கூ​டாது. இதை தீர்​மானிப்​ப​தற்​கான தேர்​தல் இது. தமிழகத்தை அனைத்து வகை​யிலும் தாழ்த்​தி, வீழ்த்த வேண்​டும் என்று பாஜக கருதுகிறது. ஏனெனில், வளர்ச்சி இருக்​கும் மாநிலங்​களில் பாஜக இருக்​காது. பாஜக இருந்​தால் அங்கே வளர்ச்சி இருக்​காது.

விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் பயனாளிகள்.

கிறிஸ்​து​மஸ் பண்​டிகை​யின்​போது நாடு முழு​வதும் கிறிஸ்​தவர்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. மகா​ராஷ்டி​ரா​வில் பிற்​படுத்​தப்​பட்ட முஸ்​லிம்​களுக்கு இடஒதுக்​கீடு ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. மணிப்​பூர் இன்​னும் பற்றி எரி​கிறது. அசாமில் பாஜக முதல்​வர், முஸ்​லிம்​கள் மீது வெளிப்​படை​யாக வெறுப்பை உமிழ்​கிறார்.

இப்​படி ஒரு நிலையை தமிழகத்​தி​லும் ஏற்​படுத்​தவே தவிக்​கிறார்​கள். ஆனால், திரா​விட மாடல் அரசில், மதநல்​லிணக்​க​மும், ஒற்​றுமை​யும் பேணப்​படு​கிறது.

வரலாற்​றிலேயே இல்​லாத எண்​ணிக்​கை​யாக 4,000 கோயில்​களுக்கு குட​முழுக்கு செய்​திருக்​கிறோம். பாலபிரஜாபதி அடிகளார் உள்​ளிட்ட உண்​மை​யான ஆன்​மிகப் பெரியோர்​கள் நம்​மைப் பாராட்​டு​கிறார்​கள். இது பாஜக​வின் கண்​களை உறுத்​திக்​கொண்டே இருக்​கிறது.

தமிழகத்​துக்கு வரும் பிரதமர் இந்​தக் கேள்வி​களுக்கு பதில் சொல்​வா​ரா? ஒரு​வர் நாட்டு மக்​கள் எல்​லோருக்​கும் ரூ.15 லட்​சம் தரு​வேன் என்று கூறியது​போல, பழனி​சாமி​யும் தற்​போது வாய்க்கு வந்​ததெல்​லாம் கூறிக் கொண்​டிருக்​கிறார்.

தேர்​தலைக் காரணம் காட்​டி, மகளிர் உரிமைத்​தொகையை 3 மாதத்​துக்கு நிறுத்திவைத்​து, மக்​களுக்கு திமுக அரசு மீது அதிருப்​தியை ஏற்​படுத்​தலாம் என்று சூழ்ச்சி செய்​தார்​கள்.

இதை தெரிந்​து​கொண்டு ரூ.5 ஆயிரத்தை முன்​கூட்​டியே வழங்​கினோம். இந்த நடவடிக்​கை​யால் மக்​கள் மகிழ்ச்​சி​யடைந்​துள்​ளனர். எதிர்க்​கட்​சிகள் நிலைகுலைந்து போயிருக்​கிறார்​கள். பாஜக என்ற டப்பா இன்​ஜினை நம்பி அதி​முக இருக்​கிறது. அதி​முக என்ற மூழ்​கும் கப்​பலை நம்பி பாஜக இருக்​கிறது.

பூஜ்ஜிய​மும், பூஜ்ஜிய​மும் சேர்ந்​தால், பூஜ்ஜி​யம்​தான். ராஜ்ஜி​யம் கிடைக்​காது. திரா​விட மாடல் ‘சூப்​பர் பாஸ்ட்’ இன்​ஜின் 11.19 சதவீத வளர்ச்​சி​யோடு அதிவேக​மாக முன்​னோக்​கிச் செல்​கிறது.

மீண்​டும் தமிழகத்​தில் திரா​விட மாடல் 2.0 ஆட்​சி​தான் அமை​யும். நாட்​டுக்கே வழி​காட்​டும் மக்​கள் நலத் திட்​டங்​கள் தொடர, ஒன்​றினைந்து வெல்​வோம். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் மனோ தங்​க​ராஜ், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், டிஆர்​பி.​ராஜா, விஜய் வசந்த் எம்​.பி. எம்​எல்​ஏக்​கள் பிரின்​ஸ், ராஜேஷ்கு​மார், தாரகை கத்​பர்ட், மேயர் மகேஷ், குமரி ஆட்​சி​யர் அழகுமீ​னா, உணவு ஆணைய தலை​வர் சுரேஷ்​ராஜன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

SCROLL FOR NEXT