திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், டிஆர்.பி.ராஜா, மாரிமுத்து, முகமது முபாரக் உள்ளிட்டோர்.படம்: ஆர்.வெங்கடேஷ்

 
தமிழகம்

“முந்தைய சாதனைகளை முறியடிக்கும் ஆட்சியை வழங்குவோம்” - திருவாரூரில் ஸ்டாலின் உற்சாகம்

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்

செய்திப்பிரிவு

திருவாரூர்: ‘‘​தி​ரா​விட மாடல் 2.0 ஆட்​சி​யில் எங்​கள் சாதனை​களை நாங்​களே முறியடிக்​கும் அளவு சிறப்​பான ஆட்​சியை வழங்​கு​வோம்’’ என்று திரு​வாரூரில் நேற்று தேர்​தல் பிரச்​சா​ரத்​தைத் தொடங்​கிய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார்.

திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து தமிழக முதல்​வரும், திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின், திரு​வாரூரில் நேற்று பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார். திரு​வாரூர் தெற்கு வீதி​யில் நடை​பெற்ற பொதுக் கூட்​டத்​தில் திமுக வேட்​பாளர்​கள் திரு​வாரூர் பூண்டி கலை​வாணன், மன்​னார்​குடி டிஆர்​பி.​ராஜா, திருத்​துறைப்​பூண்டி இந்​திய கம்​யூனிஸ்ட் வேட்​பாளர் மாரி​முத்​து, உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிடும் நன்​னிலம் எஸ்​டிபிஐ வேட்​பாளர் முகமது முபாரக் ஆகியோரை ஆதரித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: இந்த 2026 தேர்​தலின் சூப்​பர் ஸ்டார் தேர்​தல் அறிக்​கையை நேற்று முன்​தினம் வெளி​யிட்​டேன். நேற்று கொளத்​தூர் தொகு​தி​யில் வேட்பு மனு தாக்​கல் செய்​தேன். இன்று தலை​வர் கருணாநி​தியை வளர்த்​தெடுத்த திரு​வாரூர் மண்​ணிலிருந்து திமுக தலை​மை​யில் அமைந்​துள்ள மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யின் வெற்றி பிரச்​சா​ரத்தை தொடங்​கு​கிறேன். திரு​வாரூர் என்​றால் அது திமுக ஊர். அதனால் இங்​கிருந்து தொடங்​கு​கிறேன்.

          

திரு​வாரூர் பெயர் அழகு. அதை​விட திரு​வாரூர் தேர் பேரழகு. நேற்று முன்​தினம் தான் திரு​வாரூர் தேரோட்​டம் கம்​பீர​மாக நடந்து முடிந்​துள்​ளது. கடந்த 1948-க்​குப் பிறகு 22 ஆண்​டு​கள் ஓடா​மல் இருந்த திரு​வாரூர் ஆழித்​தேரை ஓட வைத்​தவர் கருணாநி​தி. திமுக ஆட்​சி​யில் இருக்​கும் போதெல்​லாம் திரு​வாரூருக்கு நிறைய செய்​துள்​ளோம்.

திரு​வாரூர் மாவட்​டத்தை உரு​வாக்​கியது, ஆட்​சி​யர், நீதி​மன்​றம், மாவட்ட காவல் அலு​வல​கங்​கள், நகராட்சி கட்​டிடம், புதிய பேருந்து நிலை​யம், மத்​திய பல்​கலைக்​கழகம், மருத்​து​வக் கல்​லூரி, மன்​னார்​குடி அரசு கல்​லூரி, பாமணி உரத் தொழிற்​சாலை, மாவட்​டம் முழு​வதும் குடிநீர் வசதி, டி.ஆர்​.​பாலு முயற்​சி​யால் செம்​மொழி உட்பட 5 புதிய ரயில்​கள் என ஏராள​மான வளர்ச்சி திட்​டங்​களை செய்​துள்​ளோம். நெல் ஜெய​ராமனுக்கு நினை​வுச் சின்​னம் அமைத்து வரு​கிறோம்.

கடந்த 2021-ல் எங்​கள் மீது நீங்​கள் நம்​பிக்கை வைத்து ஆட்சி பொறுப்பை ஒப்​படைத்​தீர்​கள். முதல்​வ​ராக பொறுப்​பேற்ற முதல் நாளி​லிருந்து பெண்​கள் விடியல் பயணம், 1.31 கோடி பெண்​களுக்கு உரிமைத் தொகை, மாணவர்​களுக்கு காலை உணவு, நான் முதல்​வன், புது​மைப் பெண், தமிழ்ப் புதல்​வன் திட்​டம் என ஏராள​மான திட்​டங்​கள் கொண்டு வந்​தேன். பொங்​கல் தொகுப்பு ரூ.3,000 வழங்​கினோம்.

தமிழகத்தை பார்த்து பல மாநிலங்​கள் மகளிர் உரிமைத் தொகை திட்​டத்தை தொடங்கி உள்​ளனர். தேர்​தலைக் காட்டி அதை நிறுத்த மத்​திய பாஜக அரசு திட்​ட​மிட்​டது. நாங்​கள் விழித்​துக் கொண்​டோம். ஏழைகளின் சுருக்​குப்​பை​யில் இருந்து காசை உரு​வ திட்​டம் போடும் பாஜக​வுக்​கு, திரா​விட மாடல் நலத்​திட்​டம் மூலம் மக்​களுக்கு நேரடி பணம் பலன் கிடைப்​பது எரி​யத்​தான் செய்​யும். யார் வயிறு எரிந்​தால் என்ன? மக்​களின் மனசு நிறையணும் என்​பது​தான் என் லட்​சி​யம். அதனால்​தான் 3 மாத உரிமைத் தொகை, கோடை கால சிறப்பு நிதி என ரூ.5,000 வழங்​கினோம்.

எல்​லாத் திட்​டத்​தி​லும் தமிழகம் டாப்​பில் இருப்​பது​தான் பாஜக தலை​மை​யில் செயல்​படும் அதி​முக உள்​ளிட்ட அடிமைக் கட்​சிகளுக்கு எரிச்​சலை உண்​டாக்கி உள்​ளது. தமிழகத்தை எப்​படி​யா​வது கலவர பூமி​யாக்​கி​விடலாம் என திட்​ட​மிட்டு ஏராள​மான போலி செய்​தி​களைப் பரப்​பிப் பார்த்​தனர். கலவர வெறியோடு திரிந்​தவர்​களுக்கு ஏமாற்​றம்​தான் மிஞ்​சி​யது. அவர்​கள் பரப்​பியது அனைத்​தும் அவதூறு என உண்மை வெளிப்​பட்டு மக்​கள் முன் அசிங்​கப்​பட்டு நிற்​கின்​றனர்.

கடந்த 2011-21 வரை தமிழகத்​தைப் பாழாக்கி தலைகுனிய வைத்த அதி​முக, 2014-லிருந்து இந்​தி​யாவை மோச​மான நிலைக்கு அழைத்​துச் சென்​றுள்ள பாஜக​வுடன் சரணாக​தி​யடைந்து கூட்​டணி அமைத்​துள்​ளது. அவர் நம் தேர்​தல் அறிக்​கை​யைப் பார்த்து காப்பி அடித்து விட்​டு, நாம் அவரைப் பார்த்து காப்பி அடித்​தோம் என புலம்​பு​கிறார்.

அவருக்கு எதைப் பற்​றி​யும் புரிதல் கிடை​யாது. தொலை நோக்கு பார்​வை​யும் இல்​லை. அவரது உளறல்​களில் ‘ஹை லைட்’ எது தெரி​யு​மா? எப்​படி உங்​கள் திட்​டங்​களை நிறைவேற்​று​வீர்​கள் எனக் கேட்​டால் வரியை உயர்த்தி நிறைவேற்​று​வேன் என்​கிறார். அதனால் தான் பழனி​சாமியை எளி​தாக மிரட்டி அடிமைக் கூட்​ட​ணி​யில் பாஜக வைத்​துள்​ளது. தமிழகத்​தின் வளர்ச்​சியை தடுப்​பது, திரா​விட மாடல் ஏற்​படுத்​திய வளர்ச்​சியை அழிப்​பது​தான் என்​டிஏ கூட்​ட​ணி​யின் நோக்​கம்.

தமிழகத்​தில் திமுகவை எதிர்க்க தங்​களுக்கு வலிமை​யில்லை என்​ப​தால் அதி​முகவை பாஜக விலைக்கு வாங்கி உள்​ளது. பொது​வாக பாஜக மக்​களுக்கு நல்​லது செய்​யாது. தேர்​தல் வந்​தால் பட்​ஜெட்​டில் கண்​துடைப்​புக்​காக சில அறி​விப்​பு​களைப் கொடுப்​பார்​கள். ஆனால், தமிழகத்​தில் அதைக்​கூட செய்ய மனமில்​லாத வஞ்சக எண்​ணத்​தோடு இருக்​கும் உரு​வம்​தான் என்​டிஏ.

பாஜக மத்​தி​யில் ஆட்​சிக்கு வந்த பிறகு தமிழகத்​துக்கு எந்த நன்​மை​யும் செய்​ய​வில்​லை. எந்த சிறப்பு திட்​டத்​தை​யும் செய்​ய​வில்​லை. இத்​தனை​யும் சமாளித்து பல்​வேறு சாதனை​களை செய்​துள்​ளோம். திறமை​யான நிர்​வாகத்​தால் நம்​பர் ஒன் மாநில​மாக உள்​ளோம்.இந்தி திணிப்பை ஏற்​க​வில்லை என்​ப​தால் நம் வீட்டு குழந்​தைகளுக்​கான கல்வி நிதி​யைக் கூட தரவில்​லை. இப்​படி வஞ்சக எண்​ணம் கொண்ட கூட்​டத்​திடம் தமிழகத்​தின் எதிர்​காலத்தை ஒப்​படைக்க முடி​யு​மா? எனவே, என்​டிஏவை புறக்​கணிக்க வேண்​டும். அப்​போது தான் தமிழகத்​தின் எதிர்​காலம் காப்​பாற்​றப்​படும்.

இந்​தத் தேர்​தல் என்​பது தமிழ்​நாடு அணி வெர்​சஸ் டெல்லி அணி. தமிழகத்தை காக்க திமுக​தான் மீண்​டும் ஆட்​சிக்கு வரவேண்​டும். தமிழகம் கலவர பூமி​யாக மாறாமல் இருக்க பாஜக- அதி​முக கூட்​ட​ணியை வேரோடு வீழ்த்த வேண்​டும். நாம் போராடு​வது திமுக கூட்​ட​ணிக்​கான வெற்றி அல்ல, இது தமிழகத்​துக்​கான வெற்​றி. எனவே, அரசி​யல் விருப்பு வெறுப்​பு​களுக்கு அப்​பாற்​பட்​டு,தமிழகத்​தைக் காக்க மக்​கள் அனை​வரும் தி​முக தலை​மையி​லான மதச்​சார்ப்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யை ஆதரிக்​க வேண்​டும்​. அடுத்​து அமைய​வுள்​ள தி​ரா​விட மாடல்​ 2.0 ஆட்​சி​யில்​ எங்​கள்​ சாதனை​களை நாங்​களே முறியடிக்​கும்​ அளவு சிறப்​பான ஆட்​சியை வழங்​குவோம்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT