வீர தீரச் செயலுக்காக ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்துக்கு முதல்வர் விஜய் ரூ.48 லட்சத்துக்கான காசோலையை வழங்கிப் பாராட்டினார். உடன் படைவீரர் நலத் துறை அமைச்சர் சரத்குமார், ராணுவ வீரரின் குடும்பத்தினர்.

 
தமிழகம்

‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்துக்கு முதல்வர் ரூ.48 லட்சம் காசோலையை வழங்கி பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: வீர தீரச் செயலுக்​காக இந்​திய அரசின் ‘கீர்த்தி சக்​ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீ​னாட்சி சுந்​தரத்தை தலை​மைச் செயல​கத்​துக்கு அழைத்து முதல்​வர் விஜய் பாராட்​டி​னார். தமிழக அரசு சார்​பில் அவருக்கு ரூ.48 லட்​சத்​துக்​கான காசோலையை வழங்கி கவுர​வித்​தார்.

தேனி மாவட்​டத்​தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ.மீ​னாட்சி சுந்​தரம், இந்​திய ராணுவத்​தின் பீரங்கி படைப் பிரி​வில் பணி​யாற்றி வரு​கிறார். கடந்த 2024 டிச.19-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்​காம் பகு​தி​யில் தீவிர​வா​தி​களுக்கு எதி​ராக நடை​பெற்ற அதிரடி தாக்​குதலின்​போது, தீவிர​வா​தி​கள் நடத்​திய துப்​பாக்​கிச் சூட்​டில் இவரது முகம், தோள்​பட்​டை​யில் பலத்த காயம் ஏற்​பட்​டது. எனினும், தனது உயிருக்கு ஏற்​பட்ட ஆபத்​தை​யும் பொருட்​படுத்​தாமல், கடமை உணர்​வுடன் தொடர்ந்து களத்​தில் போராடி தீவிர​வா​தி​களை வீழ்த்​தி​னார்.

அவரது வீர தீரச் செயலைப் பாராட்​டி, இந்​தி​யா​வின் 2-வது உயரிய அமை​திக்​கால வீர விரு​தான ‘கீர்த்தி சக்​ரா’ விருது வழங்​கப்​பட்​டுள்​ளது. டெல்​லி​யில் கடந்த ஜூன் 8-ம் தேதி நடை​பெற்ற விழா​வில் அவருக்கு இந்த விருதை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்கி கவுர​வித்​தார். மீனாட்சி சுந்​தரத்​தின் நாட்​டுப்​பற்​றும், துணிச்​சலும் தமிழ் மண்​ணுக்​குப் பெருமை சேர்த்​ததுடன், இளம் தலை​முறை​யினரிடம் வீர உணர்​வு, தேசப் பற்றைவளர்க்​கும் வித​மாக அமைந்து பாராட்​டு​களை பெற்​றது.

இந்​நிலை​யில், ‘கீர்த்தி சக்​ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்​தரத்தை நேற்று சென்னை தலை​மைச் செயல​கத்​துக்கு அழைத்து முதல்​வர் விஜய் பாராட்​டி​னார். அவருக்கு தமிழக அரசு சார்​பில் ரூ.48 லட்​சத்​துக்​கான காசோலையை வழங்கி கவுர​வித்​தார்.

ராணுவ வீரரின் குழந் தையை மடியில் வைத்துக் கொஞ்சிய முதல்வர்.

இந்த சந்​திப்​பின் ​போது, அவரது குடும்​பத்​தினரிடம் முதல்​வர் கலந்​துரை​யாடி​னார். மீனாட்சி சுந்​தரத்​தின் குழந்​தையை கையில் வாங்​கி, முதல்​வர் இருக்​கை​யில் அமர்ந்​த​வாறே தனது மடி​யில் வைத்து கொஞ்சி மகிழ்ந்​தார்.

இந்த நிகழ்​வில் முன்​னாள் படைவீரர் நலத் துறை அமைச்​சர் சரத்​கு​மார், தலை​மைச் செயலர் சாய்​கு​மார், பொதுத் துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தக்​கர், முன்​னாள் படைவீரர் நலத் துறை இயக்​குநர் சுந்​தர​வல்லி, இணை இயக்​குநர்​ மேஜர்​ எம்​.சுரேஷ் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT