தமிழகம்

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் குடிநீர், சாலைப் பணிகளை முடிக்க வேண்டும்: முதல்வர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: வடகிழக்​குப் பரு​வ​மழை தொடங்​கு​வதற்கு முன் நிறைவு பெறாத குடிநீர், கழி​வுநீர்க் கால்​வாய்​கள் மற்​றும் சாலைப் பணி​களை உடனடி​யாக செய்து முடிக்க வேண்​டும் என்று அமைச்​சர்​கள், அதி​காரி​களுக்கு முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார்.

வடகிழக்​குப் பரு​வ​மழையை முன்​னிட்டு மேற்​கொள்​ளப்பட வேண்​டிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் குறித்த ஆய்​வுக் கூட்​டம் நேற்று தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் தலை​மை​யில் நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில், சென்​னை, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், கடலூர், விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை ஆகிய மாவட்​டங்​களில் வடகிழக்​குப் பரு​வ​மழைக்கு முன் எடுக்​கப்பட வேண்​டிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது.

கூட்​டத்​தில் முதல்​வர் விஜய் வழங்​கிய அறி​வுறுத்​தல்​கள் வரு​மாறு: கடந்த பரு​வ​மழைக் காலங்​களில் வெள்​ளம் பாதித்த இடங்​கள் மற்​றும் ஏனைய பகு​தி​களில் நடை​பெறும் பணி​களை அமைச்​சர்​கள், உயர் அதி​காரி​களைக் கொண்ட குழு​வினர் வாரம் இரு முறை​யா​வது ஆய்வு செய்ய வேண்​டும்.

ஆய்​வின்​போது கண்​டறியப்​பட்ட குறை​பாடு​களைக் களை​யும் வகை​யில் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும்.

சென்னை மாநக​ராட்​சி​யைப் பொறுத்​தவரை, மாநக​ராட்சி நிர்​வாகம், சென்னை குடிநீர் வாரி​யம், காவல் துறை, தீயணைப்பு மற்​றும் மீட்​புப் பணி​கள் துறை, மருத்​து​வம் மற்​றும் மக்​கள் நல்​வாழ்​வுத்​துறை, மீன்​வளத்​துறை, மின்​சார வாரி​யம், சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் ஆகியவை ஒருங்​கிணைந்து நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும்.

மழைநீர் விரை​வாக வெளி​யேறும் வகை​யில் நீர்​நிலைகளில் ஆகா​யத் தாமரைகளை அகற்​று​வதுடன், கால்​வாய்​கள் மற்​றும் மழைநீர் வடி​கால்​களைத் தூர்​வாரு​வதற்​கும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். வடகிழக்​குப் பரு​வ​மழை தொடங்​கு​வதற்கு முன் நிறைவு​பெறாமல் இருக்​கும் குடிநீர், கழி​வுநீர்க் கால்​வாய்​கள் மற்​றும் சாலைப் பணி​களை உடனடி​யாகச் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

அறுந்து விழும் நிலை​யில் உள்ள மின் கம்​பிகள், பலவீன​மான மின் கம்​பங்​கள் ஆகிய​வற்றை உடனடி​யாக மின்​துறை​யினர் சீரமைக்க வேண்​டும்.

மழைக்​காலங்​களில் மின் கம்​பிகளால் எவ்​வித உயிர்ச்​சேத​மும் ஏற்​ப​டாத வகை​யில் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும்.

கடந்த காலங்​களில் சாலைகளில் வெள்​ளநீர் அதி​கம் தேங்​கிய பகு​தி​களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்​து, வெள்​ளநீர் தேங்​காத​வாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

வெள்ள நீரை உடனடி​யாக வெளி​யேற்ற மின்​மோட்​டார்​கள், சாலைகளில் விழுந்த மரங்​களை அப்​புறப்​படுத்த மின் ரம்​பங்​கள், ஜேசிபி போன்​றவற்​றை​யும், மழைநீர் தேங்​கும் பகு​தி​களில் உள்ள மக்​களைப் பாது​காப்​பாக வெளி​யேற்​றும் வகை​யில் படகு​களை​யும் தயார்​நிலை​யில் வைத்​திருக்க வேண்​டும்.

முகாம்​களில் தங்​கவைக்​கப்​பட்​டுள்ள மக்​களுக்கு உணவு, பாது​காக்​கப்​பட்ட குடிநீர் வழங்​கும் வகை​யில் சமு​தாய உணவுக் கூடங்​கள் தயார்​நிலை​யில் வைத்​திருக்க வேண்​டும். இவ்​வாறு அவர் அறி​வுறுத்​தி​னார்.

கூட்​டத்​தில் அமைச்​சர்​கள் ந.ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, கோ.க. அருண்​ராஜ், கே.ஏ. செங்​கோட்​டையன், டிகே.பிரபு, ம.விஜய் பாலாஜி, தலை​மைச் செயலர் மு.​சாய்​கு​மார் மற்​றும் துறைச் செயலர்​கள், டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். காணொலி வாயி​லாக, சென்​னை, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், கடலூர்​, விழுப்​புரம்​ மற்​றும்​ திரு​வண்​ணா​மலை மாவட்​ட ஆட்​சி​யர்​களும்​ பங்​கேற்​றனர்.

SCROLL FOR NEXT