தமிழகம்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடன் முதல்வர் விஜய் சந்திப்பு

வெற்றி மயிலோன்

புது டெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதல்வர் விஜய் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தமிழக முதல்​வ​ராக கடந்த மே 10-ம் தேதி பதவி​யேற்ற விஜய், மே 27-ம் தேதி முதல் முறை​யாக டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்​தித்​தார். அப்​போது, தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உட்பட பல்​வேறு கோரிக்​கைகள் அடங்​கிய மனுவை வழங்​கி​னார். பின்னர் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்மலா சீதா​ராமனை​யும் சந்​தித்த முதல்​வர் விஜய், தமிழகத்​துக்​குத் தரவேண்​டிய நிலுவை நிதி உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்​தார்.

இந்​நிலை​யில், 2-வது முறை​யாக 3 நாள் பயண​மாக முதல்வர் விஜய் இன்று டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடி தலை​மை​யில் அனைத்து மாநில முதல்​வர்​களு​ட​னான நிதி ஆயோக் கூட்​டம், டெல்​லி​யில் நாளை (ஜூன் 11) நடை​பெறுகிறது.

இந்​தக் கூட்​டத்​தில் மத்​திய நிதியமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் உள்​ளிட்​டோர் கலந்து கொள்கின்றனர். இந்​தக் கூட்​டத்​தில் பங்​கேற்​கும் முதல்​வர் விஜய், கூட்​டம் முடிந்த பின்​னர் பிரதமர் மோடி மற்​றும் மத்திய அமைச்​சர் அமித் ஷா உள்​ளிட்​டோரைச் சந்​திப்​பார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்தச் சூழலில் புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவை தமிழக முதல்வர் விஜய் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து புதுடெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் இல்லத்தில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார்.

SCROLL FOR NEXT