திருவாரூர் நன்னிலம் தொகுதி, கோவில்திருமாளத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து விட்டு வந்த முதல்வரின் தாய்மாமா தட்சிணாமூர்த்தி.

 
தமிழகம்

102 வயதில் வாக்குச்சாவடி வந்து வாக்களித்த முதல்வரின் தாய்மாமா

செய்திப்பிரிவு

திருவாரூர்: ​முதல்​வர் ஸ்​டா​லினின் தாய்மாமாவான தட்சிணா​மூர்த்​தி, தனது 102 வயதி​லும் வாக்​குப்பதிவு மையத்​துக்கு வந்து நேற்று வாக்​குச் செலுத்​தி​னார்.

திரு​வாரூர் மாவட்​டம் நன்​னிலம் வட்​டம் கோவில் திரு​மாளம் கிராமத்​தைச் சேர்ந்​தவர் தட்​சிணா​மூர்த்​தி(102). மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் மைத்​துனரும், முதல்​வர் மு.க.ஸ்​டா​லினின் தாய்​மா​மாவு​மான இவர் நேற்று அங்​குள்ள வாக்​குச்​சாவடி மையத்​துக்கு வந்து வாக்​களித்​தார்.

பின்​னர் அவர் கூறியது: என்​னிடம் தேர்​தல் அதி​காரி​கள் தபால் வாக்கு செலுத்த கேட்​டுக் கொண்​டனர்.

ஆனால், நான் வாக்​குச் சாவடிக்கு நேரில் வந்து தான் வாக்​களிப்​பேன் எனக் கூறி அதை மறுத்​து​விட்​டேன். இந்​தத் தேர்​தலில் திமுக திரா​விட மாடல் ஆட்​சி, நிச்​ச​யம் தொடரும் என்​றார்​.

SCROLL FOR NEXT