தமிழகம்

திமுகவை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது: 3 புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் முதல்வர் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: ‘‘நம்முடைய அறிவுப் பாரம்பரியம் தொடரும் வரை, ஆரிய ஆதிக்கவாதிகள், வந்த வழி மறந்த அடிமை​கள், அறிவற்ற அரைகுறை​கள் என்று யாரும் இந்த ஆலமரத்தை (தி​முகவை) அசைத்​துப் பார்க்க முடி​யாது” என்று திரு​மாவேலன் புத்தக வெளி​யீட்டு விழா​வில் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் உறு​திபட தெரி​வித்​தார்.

சென்​னை, அண்ணா நூற்​றாண்டு நூலக அரங்​கில் மூத்த பத்​திரி​கை​யாள​ரும் எழுத்​தாள​ரு​மான ப.திரு​மாவேலன் எழு​திய ‘தீரர்​கள் கோட்​டம் திமுக’, ‘திரா​விட அரசி​யல் - திரா​விட அரசு இயல்’, ‘முறை செய்து காப்​பாற்​றும் முதலமைச்​சர்’ ஆகிய மூன்று நூல்​களை​ முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வெளி​யிட்​டார்.

இவ் விழா​வில் முதல்​வர் பேசி​ய​தாவது: அரசி​யல் புரட்​சி​யின் அடை​யாள​மாக, ஒடுக்​கப்​பட்ட மக்​களை உயர்த்​துகின்ற கருத்​தி​யல் தெளி​வின் அடை​யாள​மாக, திரா​விட இயக்​கம் இருக்​கும் காரணத்​தால்​தான், ஆதிக்​க​வா​தி​களுக்​கும், அவர்​களுக்கு அடிமை சேவகம் செய்​பவர்​களுக்​கும், திரா​விடம் என்​றாலும், திரா​விட இயக்​கங்​கள் என்​றாலும், திரா​விட முன்​னேற்​றக் கழகம் என்​றாலும் கசக்​கிறது. மிக​வும் எரி​கிறது.

ஒடுக்​கப்​பட்​ட​வர்​கள் மேலெழுந்து வரு​கிறார்​கள் என்​றது​மே, எவ்​வளவு வன்​மம் வெளியே வரு​கிறது. வரலாற்றை சிறிது திரும்​பிப் பார்த்​தோம் என்​றால், விமர்​சனங்​கள் என்ற பெயரில், எத்​தனை அவதூறுகள், எவ்​வளவு காழ்ப்​புணர்​வு.. அந்​தக் காலத்​தில், “நீ​திக்​கட்​சியை குழிதோண்டி புதைப்​பேன்” என்று ஒரு​வர் சொன்​னார்.

ஆனால், இன்​றைக்கு நிலைமை என்ன? நூறாண்​டு​கள் கழித்​தும், நீதிக்​கட்​சி​யின் நீட்​சி​யாக நாம், தமிழக மக்​களு​டைய ஆதர​வுடன், மக்​க ளுக்​கான பயணத்​தைத் தொடர்ந்து கொண்​டிருக்​கிறோம். நாம் திரா​விட மாடல் என்று சொல்ல, சொல்ல அவர்​களுக்கு திரும்ப, திரும்ப எரி​கிறது. அவர்​களுக்கு திரும்ப, திரும்ப எரிய​வேண்​டும் என்றுதான், நாமும் திரும்ப, திரும்ப திரா​விட மாடல் என்று சொல்​கி​றோம்.

நூறாண்​டு​களுக்கு முன்​பு, தமிழகம் எப்​படி இருந்​தது; இன்று எப்​படி இருக்​கிறது. இதே கால​கட்​டத்​தில், நாட்​டின் பிற மாநிலங்​கள் அடைந்​திருக்​கும் சமூக வளர்ச்சி - பொருளா​தார வளர்ச்சி - உட்​கட்​டமைப்பு வளர்ச்சி என்ன? மற்ற எல்​லோரை​யும் விட, அனைத்து வகை​யிலும் நாம் இரு​பது ஆண்​டு​கள் முன்​னோக்கி பயணித்​துக் கொண்​டிருக்​கிறோம். சிலர் ‘தி​ரா​விட மாடல் என்​றால் என்​ன?’ என்று கேட்​கிறார்​கள்! அவர்​களுக்​கெல்​லாம், பதில் சொல்​லும் வகை​யில் திரு​மாவேலன் இந்த புத்​தகங்​களை எழு​தி​யுள்​ளார்.

திமுகவுக்கு சொகுசு கிடையாது: அரசி​யலில், பலரும் சொகுசை எதிர்​பார்த்து வரு​வார்​கள். ஆனால், திமுக​வுக்கு அந்த சொகுசு கிடை​யாது. சில இயக்​கங்​களைப் பார்த்​தீர்​கள் என்​றால், சிறிய எஃப்​.ஐ.ஆர். பதி​வா​னாலே, கட்​சி​விட்டு கட்சி தாவு​வார்​கள்.

ஆனால், கொடூர​மான அடக்​கு​முறை​களை எதிர்​கொண்​டு, அவதூறுகளை​யும், பழிச்​சொற்​களை​யும், வன்​மத்​தை​யும் தாங்​கி, கருப்​பு, சிவப்​பு​தான் உயிர்​மூச்​சு, அண்​ணா​வும், கலைஞரும் சொன்ன கொள்​கைகள்​தான் கட்​டளை என்று லட்​சி​யத்​துக்காக வாழ்​கின்​றவர்​கள்தான், திமுக உடன்​பிறப்​பு​கள்.

இன்று முப்​பது செகண்ட்ஸ் ரீல்ஸ் வீடியோவை கூட முழு​வதும் பார்க்​காமல் ஸ்கிப் செய்​கின்ற அளவுக்​கெல்​லாம் வேக​மாக சென்று கொண்​டிருக் கிறது! இந்த Addiction-​னால் எந்த விஷ​யத்​தி​லும், ஆழ்ந்து கவனம் செலுத்த முடி​யாமல் இளைஞர்​கள் தவிக்​கின்​றனர். இது​போன்ற சூழ்​நிலை​யில், புத்தக வாசிப்​புதான் மனதை ஒரு​முகப்​படுத்​துகின்ற மெடிட்டேஷன்.

ஒரு நாளைக்கு அரை மணி நேரம்,​அல்​லது 15 நிமிட​மாவது புத்​தகங்​களை வாசி​யுங்​கள். நம்​முடைய அறி​வுப் பாரம்​பரி​யம் தொடரும் வரை, ஆரிய ஆதிக்​க​வா​தி​கள், வந்த வழி மறந்த அடிமை​கள், அறிவற்ற அரைகுறை​கள் என யாரும் இந்த ஆலமரத்தை அசைத்​துப் பார்க்க முடி​யாது.

இங்கே அறி​வுத்தீ அணை​யாமல் இருப்​ப​தால்​தான் நம்​முடைய ஊரில், கலவரத்​தீயை பற்ற வைக்க முடிய​வில்​லை. தி​ரா​விடம் எனும் அறிவொளி இயக்​கத்​தால் நிமிர்ந்​த தமிழகம்​ ஒரு​நாளும்​ தலைகுனி​யாது. பாசிச​வா​தி​களின்​ பகல்​க​னவு இங்​கு பலிக்காது. இவ்வாறு முதல்வர் பேசி னார்.

SCROLL FOR NEXT