மதுரை: நீதிபதிகளின் அர்ப்பணிப்பும், வழக்கறிஞர்களின் தொழில் திறனும் இணைந்தால் சரியான நீதி வழங்க முடியும் என உச்ச நீதிமன்ற லைமை நீதிபதி சூர்யகாந்த் பேசினார்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடியில் 3 மாடி கூடுதல் நீதிமன்ற கட்டிடம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் விருந்தினர் மாளி கையின் திறப்பு விழா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எம்.தர்மாதிகாரி தலைமை வகித்தார். நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வரவேற்றார். கட்டிடங்களை திறந்து வைத்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசியதாவது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அனைவரும் தொழில் நெறிமுறைகளைக் கடைப்பிடித்துச் சிறப்பாகப் பணிபுரிகின்றனர்.
சமீப காலங்களில் சென்னை உயர் நீதிமன்றம், குறிப்பாக மதுரை அமர்வு குற்றவியல், உரிமையியல் மற்றும் அரசியல மைப்புச் சட்ட வழக்குகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி முன்னணியில் உள்ளது.
நீதிபதிகளின் அர்ப்பணிப்பும், வழக்கறிஞர்களின் தொழில் திறனும் இணைந்தால் சரியான நீதி வழங்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.கே.மகேஸ்வரி, எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், தனபாலன், மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம், தலைமை குற்றவி யல்நீதித்துறை நடுவர் செல் பாண்டி, வழக்கறிஞர்கள் சங்கத் நிர்வாகிகள் பங்கேற்றனர். நீதிபதி வேல்முருகன் நன்றி கூறினார்.