தமிழகம்

பெரம்பூரில் சென்னையின் 4-வது ரயில் முனையம்: விரைவில் ஒப்புதல் கிடைத்து பணிகள் தொடங்கும் என எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பெரம்பூரில் ரூ.340 கோடி மதிப்​பில் 4-வது ரயில் முனை​யம் அமைக்க விரி​வான திட்ட அறிக்கை ரயில்வே வாரி​யத்​துக்கு அனுப்​பப்​பட்​டுள்ள நிலை​யில், ஒப்​புதல் கிடைத்து விரை​வில் பணி​கள் தொடங்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. சென்​னை​யில் ஏற்​கெனவே சென்ட்​ரல், எழும்​பூர், தாம்​பரத்​தில் ரயில் முனையங்கள் அமைந்​துள்​ளன.

தென் மாவட்​டங்​களுக்கு இயக்​கப்​படும் விரைவு ரயில்​கள் பெரும்​பாலும் எழும்​பூர், தாம்​பரம் ஆகிய ரயில் நிலை​யங்​களி​லிருந்​தும், வடமாநிலங்​கள் மற்​றும் தமிழகத்​தின் மேற்கு மாவட்​டங்​களுக்கு இயக்​கப்​படும் ரயில்​கள் சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​திலிருந்​தும் புறப்​பட்டு திரும்​பு​கின்​றன. இந்த ரயில் நிலை​யங்​கள், பெட்​டிகள் பராமரிப்பு வசதி​யுடன் செயல்​படு​வ​தால் ரயில் முனையமாகத் திகழ்கின்றன.

மேலும் இந்த நிலை​யங்​களுக்கு வந்து செல்​லும் பயணி​கள் எண்​ணிக்கை நாள்​தோறும் உயர்​கிறது. குறிப்​பாக சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தில் தினசரி சுமார் 5 லட்​சம் பேர் வந்து செல்​கின்​றனர். எனவே கூட்ட நெரிசலைக் குறைக்க புதிய ரயில் முனை​யம் அமைக்​கும் முயற்சி எடுக்​கப்​பட்​டது. இதன் ஒருபகு​தி​யாக, சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யம் அருகே சால்ட் கோட்​டார்​ஸில் உள்ள இடத்​தைப் பயன்​படுத்த ஆய்வு செய்​யப்​பட்​டது. ஆய்​வில் அந்த இடம் நிராகரிக்​கப்​பட்​டது.

இதற்​கிடை​யில் சென்​னை​யின் 4-வது ரயில் முனைய​மாக பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை அமைக்க ரயில்வே நிர்​வாகம் கடந்த ஆண்டு டிசம்​பரில் பரிந்​துரை செய்​தது. இந்த பரிந்​துரைக்கு ரயில்வே வாரி​யம் அனு​மதி அளித்​தது. இதையடுத்​து, பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை 4-வது முனைய​மாக மாற்​று​வதற்​காக ரூ.340 கோடி​யில் விரி​வான திட்ட அறிக்கை தயாரித்​து, ரயில்வே வாரி​யத்​துக்கு 3 மாதங்​களுக்கு முன்பு அனுப்பி வைக்​கப்​பட்​டது.

இதுத​விர பெரம்​பூர் - அம்​பத்​தூர் இடையே 6.4 கி.மீ. தொலை​வுக்கு 5, 6-வது புதிய பாதைகள் ரூ.182 கோடி​யில் அமைக்​க​வும் பரிந்​துரை செய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்​து, ரயில்வே வாரி​யத்​திடம் இருந்து கேட்​கப்​பட்ட கேள்வி​களுக்கு பதில் அளிக்​கும் செயல்​முறை நடை​பெற்று வந்​தது.

இப்​போது அனைத்து செயல்​முறை​களும் நிறைவடைந்​து​விட்​டன. விரை​வில் ஒப்​புதல் கிடைக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: பெரம்​பூரில் போதிய நிலம் இருப்​ப​தால் இங்கு ரூ.340 கோடி​யில் 4-வது புதிய முனை​யம் அமைப்​ப​தற்​கான விரி​வான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்​பினோம். ரயில் நிலை​யத்​தின் கூடு​தல் வசதி​களுக்​கான அமை​விடங்​கள், பார்​சல் அலு​வல​கங்​கள், வாகன நிறுத்த வசதி, வணிக வளாகப் பகு​தி​கள், சுற்​றுச் சுவர்​கள், மேம்​படுத்​தப்​படும் நுழை​வா​யில்​கள் உள்​ளிட்ட விவரங்​களை இணைத்து அனுப்​பினோம்.

இதைத்​தொடர்ந்​து, ரயில்வே வாரி​யத்​திடம் இருந்து கேட்​கப்​பட்ட கேள்வி​களுக்கு பதில் அளிக்​கும் செயல்​முறை நடை​பெற்று வந்​தது. இப்​போது அனைத்து செயல்​முறை​களும் நிறைவடைந்​து​விட்​டன. விரை​வில் ஒப்​புதல் கிடைத்​து, பணி​கள் தொடங்​கும் என எதிர்​பார்க்​கிறோம்.

பெரம்​பூரில் தற்​போது 4 நடைமேடைகள் உள்​ளன. ரயில் முனைய​மாக மாறும்​போது, கூடு​தலாக 3 நடைமேடைகள் அமைக்​கப்​படும். 2 முதல் 3 ஆண்​டு​களில் இந்​த புதி​ய முனை​யத்​தை கொண்​டு​வர திட்​ட​மிட்​டுள்​ளோம்​. இவ்​வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT