சென்னை துறைமுகத்தில் அதிநவீன பயணிகள் முனையம் நேற்று திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1,800 பயணிகளுடன் துறைமுகத்துக்கு வந்தடைந்த ‘எம்.வி. எம்பிரஸ்’ சொகுசுக் கப்பல்.படம்: பிடிஐ

 
தமிழகம்

உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் சென்னை துறைமுகத்தில் அதிநவீன பயணிகள் முனையம்

1,800 பேருடன் வந்த சொகுசு கப்பலுக்கு உற்சாக வரவேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை துறை​முகத்​தில் உலகத்​தரம் வாய்ந்த உள்​கட்​டமைப்​புடன் அதிநவீன சொகுசு கப்​பல் பயணி​கள் முனை​யம் நேற்று திறந்து வைக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து, 1,800 பேருடன் வந்த பிரம்மாண்ட சொகுசு கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்​னிந்​தி​யா​வின் முதன்மை நுழை​வுவாயி​லாக விளங்​கும் சென்னை துறை​முகத்​தில், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையி​லான 3 மாத காலத்​துக்​கான சொகுசு கப்​பல் சுற்​றுலா சீசன் தொடங்​கி​யுள்​ளது. இதையொட்​டி, சென்னை துறை​முகத்​தின் மேற்கு பகு​தி​யில் உலகத்​தரம் வாய்ந்த உள்​கட்​டமைப்​புடன் அதிநவீன சொகுசு பயண கப்​பல் பயணி​கள் முனை​யம், நேற்று பயணி​களின் பயன்​பாட்​டுக்கு திறந்து வைக்​கப்​பட்​டது.

இந்த முனை​யம் 4,103 சதுர மீட்​டர் பரப்​பளவுடன், ஒரு மணி நேரத்​துக்கு 800 பயணி​களைக் கையாளும் திறன் கொண்​டது. இதில் முழு​மை​யான குளிரூட்​டப்​பட்ட வசதி, சுங்​கத் துறை மற்​றும் குடி​யுரிமை சோதனை​களுக்​கான ஒருங்​கிணைந்த ஒற்​றைச்​சாளர வசதி, அதிநவீன பாது​காப்பு அமைப்​பு​கள், லக்​கேஜ் ஸ்கேனர்​கள், நவீன ஓய்​வறை​கள், நகரும் படிக்​கட்​டு​கள் மற்​றும் சிற்​றுண்​டிச் ​சாலை என உலகத்​தரம் வாய்ந்த பல்​வேறு வசதி​கள் இடம் பெற்​றுள்​ளன.

சுற்​றுலா சீசன் தொடங்​கியதை அடுத்​து, சென்னை துறை​முகத்​துக்கு தனி​யார் நிறு​வனத்​தின் ‘எம்​.​வி.எம்​பிரஸ்’ சொகுசு கப்​பல் 1,800 பயணி​களு​டன் நேற்று வந்​தடைந்​தது. கப்​பலில் இருந்து இறங்​கிய சர்​வ​தேச மற்​றும் உள்​நாட்டு பயணி​களுக்​கு, தமிழகத்​தின் பாரம்​பரிய கலாச்​சா​ரத்தை பிர​திபலிக்​கும் வகை​யில், தமிழ்​நாடு சுற்​றுலா வளர்ச்​சிக் கழகம் சார்​பில், இசை நிகழ்ச்​சி​யுடன் உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. பயணி​களுக்கு தில​கமிடப்​பட்​டு, மலர்க் கொத்து மற்​றும் வரவேற்பு பானங்​கள் வழங்​கப்​பட்​டன.

தொடர்ந்​து, துறை​முகத்​தில் அமைக்​கப்​பட்​டிருந்த நவீன சர்​வ​தேச சொகுசு கப்​பல் முனை​யத்​தின் வசதி​களை பயணி​கள் பார்வையிட்டனர்.

ஒரே நாளில் 3,600: பயணி​கள் இதையடுத்​து, அடுத்த 1,800 பயணி​கள் அக்​கப்​பலில் தங்​களது பயணத்தை தொடங்​கினர். அந்த வகை​யில், ஒரே நாளில் 3,600 பயணி​களின் பயணத்தை சென்னை துறை​முகம் கையாண்​டிருப்​பது குறிப்​பிடத்​தக்க சாதனை​யாக கருதப்​படு​கிறது. இந்த 3 மாத காலத்​தில் எம்​.​வி.எம்​பிரஸ் சொகுசு கப்​பல் மொத்​தம் 21 கடல் பயணங்​களை மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ளது.

அதன்​படி, இலங்​கையின் ஹம்​பாந்​தோட்​டா, திரிகோணமலை, காங்​கேசன்​துறை, ஆகிய சர்​வ​தேச துறை​முகங்​களுக்​கும், இந்​தி​யா​வின் விசாகப்​பட்​டினம், புதுச்​சேரி ஆகிய உள்​நாட்டு பகு​தி​களுக்​கும் இந்த கப்​பல் இயக்​கப்​பட​ உள்​ளது. உலகத்​தரம் வாய்ந்த உள்​கட்​டமைப்​புடன், தமிழகத்​தின் விருந்​தோம்​பலை​யும் இணைத்து சென்னை துறை​முகத்தை உலகளா​விய சொகுசு கப்​பல் வரை​படத்​தில் முன்​னிலைப்​படுத்த இந்த சுற்​றுலா சீசன் உதவும் என்​று துறை​முக நிர்​வாகம்​ தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT