ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு 
தமிழகம்

தமிழகத்தில் எதிர்பார்த்த எந்த முன்னேற்றமும் இல்லை: சந்திரபாபு நாயுடு கருத்து

செய்திப்பிரிவு

“எ​திர்​பார்த்த எந்த முன்​னேற்​ற​மும் தமி​ழ​கத்​தில் காணப்​பட​வில்​லை. இங்கு இரட்டை இன்​ஜின் அரசு என்​பது காலத்​தின் தேவை​யாக உள்​ளது” என ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தெரி​வித்​தார்.

இது தொடர்​பாக சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர் கூறிய​தாவது: தமிழக மக்​களின் எதிர்​காலத்தை பற்றி நினை​வுபடுத்​தவே நான் இன்று இங்கு வந்​துள்​ளேன். தமி​ழ​கம் திரா​விட கலா​சா​ரத்​தின் தொட்​டில். நாம் அனை​வ​ரும் திரா​விடர்​கள். வரலாற்று ரீதி​யாக பார்த்​தால், ஆங்​கிலேயர் காலத்​தில் நாம் அனை​வ​ரும் ஒருங்​கிணைந்த மாகாண​மாக இருந்​தோம்.

சென்னை தான் அதன் தலை​மையக​மாக இருந்​தது. என்​டிஆர் கூட தனது கலை பயணத்தை இங்​கு​தான் தொடங்​கி​னார். இன்​றைக்கு ஹைத​ரா​பாத் மற்​றும் பெங்​களூரு விமான நிலை​யங்​கள் சென்னை விமான நிலை​யத்தை விட வேக​மாக முன்​னேறி​விட்​டன. ஆந்​தி​ரா​வில் கள்​ளச்​சா​ரா​யம் என்ற பேச்சே இல்​லை.

ஆனால், தமி​ழ​கத்​தில் உள்ள நகரங்​களின் உட்​கட்​டமைப்​பு​கள் எதிர்​பார்த்த அளவுக்கு இல்​லை. அதே பழைய சாலை​கள். பலத்த மழை பெய்​தால் வெள்ள அபா​யம். சட்​டம் - ஒழுங்கு சீர்​கெட்​டுள்​ளது. பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் 59 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. பட்​டியலின மக்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் 39 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது.

எதிர்​பார்த்த எந்த முன்​னேற்​ற​மும் தமி​ழ​கத்​தில் காணப்​பட​வில்​லை. ஐடி துறை​யில் ஹைத​ரா​பாத், பெங்​களூரு போன்​றவை எல்​லை​களை தாண்டி சென்​று​விட்​டன. சென்​னையைப் பற்றி யாரும் பேசுவ​தில்​லை. உலகளா​விய நிறு​வனங்​களில் தலைமை செயல் அதி​காரி​களாக இருப்​பவர்​கள் தமி​ழர்​கள். ஆனால், அவர்​களின் திறமை​கள் தமி​ழ​கத்​துக்கு பயன்​படு​வ​தில்​லை.

எனவே, உங்​களுக்​கான அதி​காரமளித்​தல், வேலை​வாய்ய்​பு, பிர​காச​மான எதிர்​காலத்தை தேசிய ஜனநாயக கூட்​டணி நிச்​ச​யம் வழங்​கும். இரட்டை இன்​ஜின் அரசு எப்​படி செயல்​படும் என்​பதை நான் பார்த்​திருக்​கிறேன். இப்​போது கூகுள் நிறு​வனத்​தின் 15 பில்​லியன் அமெரிக்க டாலர்​கள் முதலீட்டை நாங்​கள் பெற்​றிருக்​கி​றோம்.

ஒரே ஆண்​டில் 25.3 சதவீத முதலீடு ஆந்​திர பிரதேசத்​துக்கு வந்​துள்​ளது. இதை தனி மாநில​மாக எங்​களால் ஈர்க்க முடி​யாது. இரட்டை இன்​ஜின் அரசு என்​பது புல்​லட் வேக வளர்ச்​சி​யாகும். இது காலத்​தின் தேவை. அதேசம​யம் ஒற்றை இன்​ஜின் அரசு,அரசி​யல் லாபம் நோக்​கம் கொண்​டது. மாநிலங்​கள் மற்ற மாநிலங்​களு​டன் போட்​டி​யிட வேண்​டும். அதேசம​யம் மத்​திய அரசுடன் ஒத்​துழைக்க வேண்​டும். நமக்கு தாய்​மொழிகள் வெவ்​வேறாக இருக்​கலாம். ஆனால், நம் நாடு ஒன்​று​தான்.

அனை​வ​ரும் பாரத மாதா​வின் பிள்​ளை​கள். அதை​விடுத்து தெற்​கு, வடக்கு என்று பேசி கொண்​டிருக்​கக் கூடாது. எனவே, தமிழக மக்​களே சிந்​தி​யுங்​கள். தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு வாக்​களி​யுங்​கள். இந்த வாய்ப்பை தவற​விடக்​கூ​டாது. தவற​விட்​டால் அடுத்த 5 ஆண்​டு​களை நீங்​கள் இழக்க நேரிடும்.

தொகுதி மறு​வரையறை​யில் பிரதமர் மோடியை தமி​ழ​கம் தோற்​கடித்து விட்​ட​தாக ஸ்டா​லின் கூறு​வது ஆச்​சரிய​மாக உள்​ளது. நானும் திரா​விடன் தான். அதை மறக்​காதீர்​கள். இந்த மசோ​தா​வால் எந்த மாநில​மும் இடங்​களை இழக்​காது, 50 சதவீத இடங்​கள் கூடத்​தான் செய்​யும். அதில் பெண்​களுக்கு 33 சதவீத இட ஒதுக்​கீடு. இதில் தென்​னிந்​தியா எப்​படி இடங்​களை இழக்​கிறது? திமுக-​வும், காங்​கிரஸும் பெண்​களுக்கு எதி​ராக துரோகம் இழைத்​து​ விட்​டனர். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்.

SCROLL FOR NEXT