கரூரில் நேற்று ஆய்வு மேற்கொண்ட மத்தியதடய அறிவியல் ஆய்வகக் குழுவினர். | படம்: க.ராதாகிருஷ்ணன் |
கரூர்: தவெக தலைவர் விஜய்க்கு டெல்லி அலுவலகத்தில் வரும் 12-ம் தேதி ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில், கரூர் வேலுசாமிபுரத்தில் மத்திய தடய அறிவியல் ஆய்வக (சிஎஃப்எஸ்எல்) குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர்.
நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஸ் தங்கையா உள்ளிட்ட காவல் அதிகாரிகள் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமைய கத்தில் டிச. 29-ம் தேதி ஆஜராகினர். அவர்களிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் வரும் 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூரில் சம்ப வம் நடந்த வேலுசாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சக விவகாரத் துறை அதிகாரி தலைமையில் மத்திய தடய அறிவியல் ஆய்வகக் குழுவினர் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
விஜய்யின் பிரச்சார வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடம், சாலையின் அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்தனர். அவற்றை வீடியோ பதிவு செய்து, புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.