தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை விரைவில் தொடங்குகிறது சிபிஐ

செய்திப்பிரிவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்​பான விசா​ரணையை விரை​வில் சிபிஐ தொடங்க இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராக இருந்த ஆம்​ஸ்ட்​ராங், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி படு​கொலை செய்​யப்​பட்​டார்.

தமிழகத்​தையே உலுக்​கிய இந்த வழக்கை சென்னை காவல் துறை முதலில் விசா​ரித்​தது. இந்த விசா​ரணை​யில் 30 பேர் மீது 7,411 பக்​கங்​கள்கொண்ட குற்​றப்​ பத்​திரி​கையை காவல்​துறை தாக்​கல் செய்​தது.

மேலும், இவ்​வழக்​கின் முக்​கிய குற்​ற​வாளி​யான திரு​வேங்​கடம், சீசிங் ராஜா ஆகிய இரு​வர் காவல் ​துறை​யின​ரால் என்​கவுன்ட்​டரில் சுட்​டுக்​கொல்​லப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், காவல் துறை​யின் விசா​ரணை​யில் திருப்தி இல்லை என்​றும், கொலை​யின் பின்​னணி​யில் உள்ள உண்​மை​யான குற்​ற​வாளி​களைக் கண்​டறிய வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்​டும் என்​றும் ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் கே.இம்​மானுவேல் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், காவல் துறை​யின் விசா​ரணை​யில் உள்ள பல்​வேறு குளறு​படிகளைச் சுட்​டிக்​ காட்​டியது. அதோடு, காவல்​துறை தாக்​கல் செய்த குற்​றப்​ பத்​திரி​கையை ரத்​து செய்த நீதிப​தி, இவ்​வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்​தரவு பிறப்​பித்​தார்.

உயர் நீதி​மன்​றத்​தின் இந்த உத்​தரவை எதிர்த்து அப்​போதைய தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தது. இதனால் உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் ஏற்​பட்ட ஆட்சி மாற்​றத்​தைத் தொடர்ந்​து, முந்​தைய அரசு தாக்​கல் செய்​திருந்த மேல்​முறை​யீட்டு மனுவை தற்​போதைய அரசு அண்​மை​யில் திரும்​பப் பெற்​றுக் ​கொண்​டது. இதனால், சிபிஐ விசா​ரணைக்கு இருந்த முட்​டுக்​கட்​டைகள் நீங்​கின.

முன்​ன​தாக விசா​ரணை ஆவணங்​களை ஒப்​படைப்​ப​தில் தாமதம் ஏற்​படு​வ​தாக ஆம்​ஸ்ட்​ராங்​கின் மனைவி பொற்​கொடி உச்ச நீதி​மன்​றத்​தில் முறை​யிட்​டிருந்​தார்.

தற்​போது இந்த வழக்கு தொடர்​பான அனைத்து கோப்​பு​களை​யும் சிபிஐ அதி​காரி​களிடம் காவல் துறை அதி​காரப்​பூர்​வ​மாக ஒப்​படைத்​துள்​ளது. இதன் அடிப்​படை​யில், சிபிஐ விரை​வில் புதிய முதல் தகவல் அறிக்​கை​யைப் பதிவு செய்​து, விசா​ரணை​யைத் தீவிரப்​படுத்த உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​இருக்​கிறது.

SCROLL FOR NEXT