டெல்லியில் சிபிஐ விசாரணை முடிந்து வெளியே வந்த தவெக தலைவர் விஜய். படம்: பிடிஐ

 
தமிழகம்

விஜய்யிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை - குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பா?

செய்திப்பிரிவு

சென்னை: டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் நேற்று ஆஜரான தவெக தலை​வர் விஜய்​யிடம் 6 மணிநேரம் விசா​ரணை நடத்தப்​பட்​டது. பிப்​ர​வரியில் தாக்​கல் செய்​யப்பட உள்ள குற்​றப்​பத்​திரிக்​கை​யில் விஜய் பெயரும் சேர்க்​கப்பட வாய்ப்பு இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் கடந்த 12-ம் தேதி ஆஜரா​னார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. பின்னர் 19-ம் தேதி ஆஜாரக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து நேற்று காலை மீண்டும் அவர் ஆஜரா​னார். காலை 10.30 மணிக்கு விசா​ரணை தொடங்​கியது. கூட்ட நெரிசல் தொடர்​பாக அதி​காரி​கள் அடுக்​கடுக்​காக கேள்வி​களை எழுப்​பினர்.

குறிப்​பாக, கூட்​டம் கட்​டுக்​கடங்​காமல் போன பிறகும் ஏன் உரையைத் தொடர்ந்​தீர்​கள், தாமதத்​துக்கு திட்​ட​மிட்ட காரணம் எது​வும் உண்​டா, தாமதமாகும் தகவலை மக்​களுக்கு ஏன் அறிவிக்​க​வில்​லை, போலீ​ஸார் கொடுத்த பாது​காப்பு வழி​முறை​கள் மீறப்​பட்​ட​தா என்​பது உட்பட பல்​வேறு கேள்விகளை அதி​காரி​கள் எழுப்​பினர். அதற்கு விஜய் விளக்​கம் அளித்​த​தாக தெரி​கிறது.

‘காவல் துறை வழங்​கிய அனைத்து பாது​காப்பு நெறி​முறை​களை​யும் முறை​யாக பின்​பற்​றினேன். ஆனால், கூட்​டத்தைகட்​டுப்​படுத்த போதிய அளவில் போலீ​ஸார் நியமிக்​கவில்​லை’ என்று விஜய் கூறிய​தாக தெரி​கிறது. சில கேள்வி​களுக்​கான ஆதா​ரங்​களை சமர்ப்​பிக்க விஜய் தரப்​பில் கூடு​தல் அவகாசம் கேட்​கப்​பட்​ட​தால், அவர் மீண்​டும் விசா​ரணைக்கு அழைக்​கப் படலாம் என்​றும் தெரி​கிறது. விசா​ரணை மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்​தது. பின்னர் அங்​கிருந்து விஜய் புறப்​பட்​டார்.

பிப்​ர​வரி​யில் இந்த வழக்​கின் குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்ய சிபிஐ தீவிரம் காட்டி வரு​கிறது. குற்​றப்​பத்​திரி​கை​யில் விஜய் பெயரும் சேர்க்​கப்பட அதிக வாய்ப்பு உள்​ள​தாக சிபிஐ வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. இதுகுறித்து சிடிஆர் நிர்​மல்குமார் டெல்லியில் கூறும்போது, விஜய்​யிடம் விசா​ரணை முடிந்தது.

இனி சம்​மன் எது​வும் இல்லை. அவரது பிரச்​சாரம் திட்டம் தொடர்​பான தகவல் களை சிபிஐ கேட்டு தெரிந்து கொண்​டது. குற்​றப்​பத்​திரி​கையில் விஜய் பெயர் இடம்பெறு​வது, கைது என ஊடகங்​களில் பரவி வரும் தகவல்​ முற்​றி​லும்​ தவறு. இவை அனைத்​தும்​ தி​முக​வால் பரப்​பப்​படும்​ வதந்​தி’’ என்​றார்​.

SCROLL FOR NEXT