தமிழகம்

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு: குற்றச்சாட்டு பதிவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சீன விசா முறை​கேடு கார்த்தி சிதம்​பரத்​துக்கு எதி​ரான சிபிஐ வழக்​கில் குற்​றச்​சாட்டு பதிவுக்கு இடைக்​காலத் தடை விதிக்க டெல்லி உயர் நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டதுடன் பதிலளிக்க சிபிஐக்கும் உத்​தர​விட்​டுள்​ளது.

பஞ்​சாபில் செயல்​படுத்​தப்​பட்டு வரும் திட்​டம் தொடர்​பாக, சீனர்​களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ.50 லட்​சம் லஞ்​சம் பெற்​ற​தாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்​பரம், பாஸ்கர ராமன் உள்​ளிட்ட 8 பேருக்கு எதி​ராக சிபிஐ வழக்கு பதிந்தது.

          

மேலும் இந்த வழக்​கில் கார்த்தி சிதம்​பரம், பாஸ்கர ராமன் உள்​ளிட்​டோருக்கு எதி​ரான சிபிஐ வழக்​கில் குற்​றச்​சாட்​டு​களை பதிவு செய்வதற்கான உத்தரவை சிறப்பு நீதி​மன்​றம் அண்​மை​யில் பிறப்பித்தது.

இதை எதிர்த்து கார்த்தி சிதம்​பரம் தாக்​கல் செய்த மனுவை விசா​ரித்த டெல்லி உயர் நீதி​மன்ற நீதிபதி மனோஜ் ஜெயின், தற்​போதைய நிலை​யில் குற்​றச்​சாட்டு பதிவுக்கு தடை விதிக்க முடி​யாது என்று தெரி​வித்​ததுடன் இந்த மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐக்​கு உத்​தர​விட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT