தமிழகம்

நடிகை ஸ்ரீதேவி​யின் சொத்துக்கு உரிமை கோரி செங்கை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிராகரிப்பு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்​கரை சாலை​யில் 2.7 ஏக்​கர் நிலத்​தை, சம்​பந்த முதலி​யார் என்​பவரது குடும்​பத்​தினரிடம் இருந்து விலைக்கு வாங்​கி​யுள்​ளார்.

கடந்த 37 ஆண்​டு​களாக அந்த சொத்தை ஸ்ரீதே​வி​யின் குடும்​பத்​தினர் அனுப​வித்து வரும் நிலை​யில், சம்​பந்த முதலி​யார் மகன் சந்​திரசேகரனின் 2-வது மனை​வி​யின் மகன் நடராஜன் மற்​றும் மகள் சிவ​காமி ஆகியோர் அந்த சொத்​துக்கு உரிமை கோரி​யும், சொத்​தில் பங்கு கேட்​டும் செங்​கல்​பட்டு கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் உரிமை​யியல் வழக்கு தொடர்ந்​தனர்.

இந்த வழக்கை நிராகரிக்​கக் கோரி ஸ்ரீதே​வி​யின் கணவர் போனிகபூர், அவரது மகள்​கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனுக்​களை ஏற்​கெனவே விசா​ரித்த செங்​கல்​பட்டு நீதி​மன்​றம், முழு​மை​யான விசா​ரணைக்​குப் பிறகே சொத்​தின் உரிமை குறித்து முடி​வெடுக்க முடி​யும் என்று கூறி போனி கபூர் மற்​றும் அவரது மகள்​களின் மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை எதிர்த்து போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். அதில், ‘அந்த சொத்தை சட்​டப்​படி விலைக்கு வாங்கி அனுப​வித்து வரும் நிலை​யில் போலி வாரிசு சான்​றிதழ் மூல​மாக 37 ஆண்​டு​களுக்​குப் பிறகு தற்​போது சிலர் உரிமை கோரி வழக்கு தொடர்ந்​துள்​ளனர். எனவே, செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்கை நிராகரிக்க வேண்​டும்’ என்று கோரி​யிருந்​தனர்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி டி.​வி.தமிழ்​செல்​வி, “ஏற்​கெனவே ஸ்ரீதே​வி​யின் குடும்​பத்​தா​ருக்கு எதி​ராக இந்த சொத்​தில் பங்கு கேட்டு நடராஜன் மற்​றும் சிவ​காமி ஆகியோர் தொடர்ந்த வழக்கை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது. ஆனால், அவர்​கள் சொத்தை அபகரிக்​கும் நோக்​கில் செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தி​லும் வழக்கு தொடர்ந்​திருப்​பது ஏற்​புடையதல்ல” என்று கூறி அந்த வழக்கை நிராகரித்​தும், செங்​கல்​பட்டு நீதி​மன்ற உத்​தரவை ரத்து செய்​தும் உத்​தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT