தமிழகம்

முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் மீது வழக்கு

செய்திப்பிரிவு

சென்னை: ​முன் அனு​ம​தி​யின்றி ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​ய​தாக திமுக-வைச் சேர்ந்த ஆ.ரா​சா, மா.சுப்​பிரமணி​யன் உள்பட ஆயிரம் பேர் மீது சைதாப்​பேட்டை போலீ​ஸார் இரு பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

நடந்து முடிந்த சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரில் திமுக மற்​றும் மறைந்த தலை​வர் மு.கருணாநிதி உள்​ளிட்​டோரை முதல்​வர் விஜய் விமர்​சித்து பேசியதை கண்​டித்து திமுக சார்​பில் தமிழகம் முழு​வதும் நேற்று முன்​தினம் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

சென்னை சைதாப்​பேட்​டை​யில், கலைஞர் வளைவு அருகே நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் திமுக துணை பொதுச்​செய​லா​ளர் ஆ.ரா​சா, தென் சென்னை எம்​.பி. தமிழச்சி தங்​க​பாண்​டியன், முன்​னாள் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் உள்பட ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர்.

இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் கலந்து கொண்ட ஆ.ராசா சர்ச்​சைக்​குரிய வகை​யில் முதல்​வர் குறித்து விமர்​சித்​தார். இது விமர்​சனங்​களுக்கு உள்​ளானது. இதுஒரு​புறம் இருக்க சைதாப்​பேட்​டை​யில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு போலீ​ஸார் அனு​மதி வழங்​க​வில்​லை.

இதையடுத்​து, திமுக நிர்​வாகி​களான ஆ.ரா​சா, மா.சுப்​பிரமணி​யன் உள்பட போராட்​டத்​தில் கலந்து கொண்ட ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​ட​வர்​கள் மீது, தடையை மீறி சட்ட விரோத​மாக கூடு​தல், பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​படுத்​துதல் ஆகிய இரு பிரிவு​களின் கீழ் போலீ​ஸார்​ வழக்​குப்​ பதிவு செய்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT