மதுரை வைகை தென்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு காளையை பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் உரிமையாளர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

 
தமிழகம்

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தயாராகும் தென் மாவட்ட காளைகள்: காளை வளர்க்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை அவனி​யாபுரம், பாலமேடு மற்​றும் அலங்​காநல்​லூர் ஜல்லிக்கட்டு போட்​டிகளுக்கு இன்​னும் ஒரு மாதமே உள்ள நிலை​யில் கிராமங்​களில் ஜல்லிக்கட்டு காளை​களுக்கு அதன் உரிமை​யாளர்​கள் பிரத்​யேக பயிற்​சிகள் அளித்து தயார் செய்து வரு​கிறார்​கள்.

பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு மதுரை மாவட்​டம் அலங்​காநல்​லூர், பாலமேடு மற்​றும் அவனி​யாபுரத்​தில் நடை​பெறும் ஜல்லிக்கட்டுப் போட்​டிகள் உலகப் புகழ்​பெற்​றவை. இப்​போட்​டிகளின்​போது வாடி​வாசல்​களில் காளை​களை அவிழ்ப்​ப​தையே ஜல்​லிக்​கட்டு ஆர்​வலர்​கள் பெரு​மை​யாக கருதுகின்​றனர்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்​டிகளைத் தொடர்ந்து தமிழகத்​தின் பிற மாவட்​டங்​களில் போட்​டிகள் நடை​பெறும். அடுத்த மாதம் நடை​பெற இருக்​கும் ஜல்லிக்கட்டுப் போட்​டிகளுக்கு மதுரை, திண்​டுக்​கல், தேனி, சிவகங்​கை, திருச்சி போன்ற தென்​மாவட்​டங்​களில் காளை உரிமை​யாளர்​கள் தங்​கள் காளை​களைத் தயார்​படுத்​தும் பணி​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​தக் காளை​களுக்கு போட்​டிகளில், நின்று விளை​யாடு​வதற்​கும், திமில்​களைப் பிடித்து அடக்​கப் பாயும் மாடு​பிடி வீரர்​களை நெருங்​க​வி​டா​மல் பிரத்​யேகப் பயிற்​சிகளை வழங்கி வரு​கின்​றனர்.

செயற்கை வாடி​வாசல் அமைத்​தும், மண்ணை குவித்து வைத்​தும், கொம்​பு​களைக் கொண்டு குத்​த​விடு​வது, நீச்​சல் பயிற்​சி, ஓட்​டப்​ப​யிற்​சி, நடைப்​ப​யிற்சி ஆகிய​வற்றை காளை​களுக்கு அதன் உரிமை​யாளர்​கள் வழங்​கு​கின்​றனர்.

காளை​களின் உடல் திட​மாக இருக்​கப்பருத்​திக் கொட்​டையை அரைத்​துக் கொடுக்​கின்​றனர். இது தவிர துவரை, உளுந்து தோலை தண்​ணீரில் ஊறவைத்​துக் கொடுக்​கின்​றனர். களத்​தில் காளைக்கு இளைப்பு வராமல் இருக்க தலைச்​சுருளி வேரை​யும், திட​காத்​திர​மாக இருக்க குமுட்​டிக் காயை​யும் அரைத்​துக் கொடுக்​கின்​றனர்.

களத்​தில் நீண்ட நேரம் நின்று விளை​யாடி வீரர்​களை விரட்டி அடிக்​க​வும், மிரட்டி துரத்​த​வும் காளை​கள் தயா​ராகி வரு​கின்​றன. கடந்த சில ஆண்​டு​களாக பெண்​களும் ஜல்லிக்கட்டு காளை​களை வளர்த்து போட்​டிகளில் களமிறக்​கு​கின்​றனர்.

அதனால், நடப்​பாண்டு காளை வளர்ப்​பில் ஈடு​படும் பெண்​களின் எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ளது. கிராமங்​களில் உள்ள விவ​சா​யிகள் முதல் ஜல்லிக்கட்டு ஆர்​வலர்​கள், அரசி​யல் கட்​சி​யினர், விஐபிக்கள் வரை காளை​களை வளர்த்து போட்​டிகளில் பங்​கேற்க வைப்​ப​தில் ஆர்​வம் காட்​டு​கின்​றனர்.

இது குறித்து அரசு கால்​நடை மருத்​து​வர் மெரில்​ராஜ் கூறிய​தாவது: காளை​கள் வாடி​வாசல் முன் நின்று விளை​யாடு​வதைப் பொறுத்​து​தான் அதன் விலை மதிப்​பிடப்​படு​கிறது.

ரூ.50 ஆயிரம் முதல் பல லட்​சம் ரூபாய் வரை ஜல்லிக்கட்டுப் போட்​டிகளில் பங்​கேற்​கும் காளை​களுக்கு சந்​தைகளில் விலை மதிப்​பிடப்​படு​கிறது. இதற்​காக, சிறு வயதிலே கன்​றுக்​குட்​டிகளை வாங்​கி, காளை உரிமை​யாளர்​கள் பயிற்சி வழங்கி ஜல்லிக்கட்டுப் போட்​டிகளில் பங்​கேற்க வைக்​கின்​றனர்.

SCROLL FOR NEXT