தமிழகம்

டாஸ்மாக் கடைகளை மூட கால அவகாசம் வேண்டும்: கட்டிட உரிமையாளர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: ​டாஸ்மாக் கடைகள் மூட உரிய கால அவகாசம் வழங்க வலி​யுறுத்​தி, பார் உரிமை​யாளர்​கள், பார் கட்​டிட உரிமை​யாளர்​கள் நிர்​வாக இயக்​குநர் அலு​வல​கம் முன்​பாக போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தமிழகத்​தில் கல்வி நிறு​வனங்​கள், வழி​பாட்​டுத் தலங்​கள், பேருந்து நிலை​யங்​கள் அரு​கில் இருக்​கும் 717 மதுக்​கடைகளை 2 வாரங்​களில் மூட முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார். இதையடுத்து அந்த கடைகள் படிப்​படி​யாக மூடப்​பட்டு வரு​கின்​றன.

இதனிடையே 2 வாரங்​களுக்​குள் கடைகளை காலி செய்​வது சாத்​தி​யமில்லை என்​றும் உரிய கால அவகாச​மும், உரிமை​யாளர்​கள், பணி​யாளர்​கள் போதிய மாற்று ஏற்​பாடு​களை வழங்க வலி​யுறுத்தியும் திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்​டங்​களை சேர்ந்த பார் உரிமை​யாளர்​கள், கட்​டிட உரிமை​யாளர்​கள் மற்​றும் தொழிலா​ளர்​கள் சென்னை எழும்​பூரில் உள்ள டாஸ்​மாக் தலை​மையகம் முன்​பாக போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

மேலும் தமிழகம் முழு​வதும் உள்ள 2,700 பார்​களை​யும் மூடி தங்​களது எதிர்ப்பை தெரி​வித்​தனர். இதுகுறித்து தமிழ்​நாடு டாஸ்மாக் பார் உரிமை​யாளர்​கள், பார் கட்​டிட உரிமை​யாளர்​கள் மற்​றும் தொழிலா​ளர்​கள் நலச் சங்க மாநில தலை​வர் என்.அன்​பரசன் கூறிய​தாவது: தமிழகத்​தில் பள்​ளி, கோயில், பேருந்து நிலை​யம் உள்​ளிட்ட இடங்​களில் உள்ள 717 கடைகள் மூடப்​படு​வ​தாக தமிழக அரசு உத்​தரவு பிறப்​பித்​திருப்​பது வரவேற்​கத்​தக்​கது.

ஆனால் சட்ட விதிப்​படி​தான் தற்​போதைய மது​பானக் கடைகள் இயங்கி வரு​கின்றன உச்​ச நீ​தி​மன்​றம் 50 மீட்​டர் என கூறி​யிருக்​கும் நிலை​யில் 500 மீட்​டர் என கூறி​யிருப்​ப​தால் எந்த மது​பானக் கடைகளும் இயங்க முடி​யாத சூழல் உரு​வாகும் என்​பதை தமிழக முதல்​வருக்கு அதி​காரி​கள் எடுத்​துக் கூற வேண்​டும்.

தற்​போது இயங்கி வரும் 717 மது​பானக் கடைகளும் சட்ட விதி​முறைக்​குட்​பட்டு நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கிறது. தற்​போது பொறுப்​பேற்ற புதிய அரசு, ஊழியர்​களின் வாழ்​வா​தா​ரத்தை பற்றி கவலைப்​ப​டா​மல் இது போன்ற செயல்​களை செய்​வது ஏற்​றுக்​கொள்ள முடி​யாது.

எனவே புதி​தாக பொறுப்​பேற்​றுள்ள அரசுக்கு எங்​கள் கோரிக்​கை​யாக மதுக் கடைகளை மூட கால அவகாசம் வழங்க வேண்​டும், இல்​லை​யென்​றால் தமிழகத்​தில் உள்ள ஒட்​டுமொத்த மது​பானக் கடைகளை​யும் மூட வேண்​டும் என்று கோரிக்கை மனு அளித்​துள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதனிடையே சங்க பிர​தி​நி​தி​களை நிர்​வாக இயக்​குநர் நேற்று மாலை அழைத்துப் பேசி கோரிக்​கைகளை நிறைவேற்​று​வ​தாக உறு​தி​யளித்​ததைத் தொடர்ந்து மாலை முதல்​ பார்​கள்​ மீண்​டும்​ திறக்​கப்​பட்​டன.

SCROLL FOR NEXT