சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பாஜக சார்பில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 
தமிழகம்

திமுகவினரின் பிடியில் இருந்து பிஎல்ஓ அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும்: அண்ணாமலை வலியறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ​தி​முக​வின் பிடி​யில் இருந்து பிஎல்​ஓ-க்​களை காப்​பாற்ற வேண்​டும் என அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார்.

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​கள் தொடர்​பான கள நில​வரத்தை ஆய்வு செய்​யும் கூட்​டம் தமிழக பாஜக சார்​பில் சென்​னை​யில் நேற்று நடந்​தது. இதற்கு பாஜக தேசிய பொதுச் செய​லா​ளர் தருண் சுக், பாஜக முன்​னாள் மாநில தலை​வர்​கள் அண்​ணா​மலை, தமிழிசை, பொன்​.​ரா​தாகிருஷ்ணன், மேலிட பொறுப்​பாளர்​கள் சுதாகர் ரெட்​டி,அரவிந்த் மேனன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

கூட்​டத்​துக்​குப் பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அண்​ணா​மலை கூறிய​தாவது: ஆளும்​கட்​சி​யின் பிடி​யில் இருந்து பிஎல்​ஓ-க்​களை காப்​பாற்ற வேண்​டும். நேர்​மை​யான முறை​யில் எஸ்​ஐஆர் நடக்க வேண்​டும்.

இந்​தி​யா​வில் சம்​ஸ்​கிருத பல்​கலைக்​கழகங்​கள் தான் அதி​க​மாக இருக்​கிறது. ஐக்​கிய முற்​போக்கு கூட்​ட​ணி​யில் திமுக இருந்​தும் கூட, அதிக சம்​ஸ்​கிருத பல்​கலைக்​கழகத்தை திறந்​தார்​கள்​.இத​னால்​தான் அதிக நிதி ஒதுக்​கப்​படு​கிறது.

தமிழ் பல்​கலைக்​கழகம்: மத்​திய கல்வி அமைச்​சகத்​திடம் பேசி பிஹார், கவு​காத்​தி, டெல்​லி​யிலும் புதிய தமிழ் பல்​கலைக்​கழகத்தை திறக்க திமுக​விடம் கூறி வரு​கிறோம். செத்​துப்​போன மொழி என சொல்​லும் உதயநி​தி​யின் கருத்து வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது.

இது​வரை முதல்​வரும், துணை முதல்​வரும் அவர்​கள் செய்த சாதனையை சொல்​ல​வில்லை என்​ப​திலேயே அவர்​கள் தேர்​தலை எதிர்​கொள்ள பயப்​படு​கிறார்​கள் என தெரி​கிறது.

நெல் கொள்​முதல் நிலை​யங்​களை கட்ட மத்​திய அரசு கொடுத்த ரூ.360 கோடியை திமுக அரசு ஊழல் செய்​திருக்​கிறது. நெல் ஈரப்​ப​தத்​துக்கு மாநில அரசின் தவறு​தான் காரணம். மெட்ரோ ரயில் விவ​காரத்தை பொறுத்​தவரை, வேண்​டுமென்றே தவறான தரவு​களை தமிழக அரசு கொடுத்​திருக்​கிறது.

நிலம் கையகப்​படுத்து போன்ற எந்த விவரங்​களும் அதில் இடம்​பெற​வில்​லை. எனவே, பல கேள்வி​களை மத்​திய அரசு கேட்​டுள்​ளதே தவிர, மெட்ரோ திட்​டத்தை நிராகரிக்​க​வில்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT