தமிழகம்

நெருக்கடி நிலை தந்த வரலாற்று பாடங்களை இளைஞர்கள் விரிவாக கற்க பாஜக அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: நெருக்​கடி நிலை​யின் 51-வது ஆண்டு நினை​வையொட்​டி, தமிழக பாஜக சார்​பில் சென்னை தி.நகரில் உள்ள கமலால​யத்​தில் நேற்று “அரசி​யலமைப்பு படு​கொலை தினம்” கடைப்​பிடிக்​கப்​பட்​டது.

இதில், பாஜக தேசிய இணை பொறுப்​பாளர் சுதாகர் ரெட்​டி, மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் பலர் கலந்​து​ கொண்​டனர்.

இதில் சுதாகர் ரெட்டி பேசி​ய​தாவது: 1975 ஜூன் 25 அன்​று, மக்​களின் அடிப்​படை உரிமை​கள் பறிக்​கப்​பட்​டு, பத்​திரிகை சுதந்​திரம் நசுக்​கப்​பட்​டு ஏராளமானோர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். ‘இந்​தி​யா​தான் இந்​தி​ரா, இந்​தி​ரா​தான் இந்​தி​யா’ என்ற முழக்​கம் உரு​வானது.

இது ஜனநாயகம், அரசி​யலமைப்​புக்கு மேலாக ஒரு தனி​நபர் அதி​காரம் குவிக்​கப்​பட்​டதன் ஆபத்​தான அடை​யாளம் ஆகும். அவசரநிலை காலத்​தில் கொண்​டு​வரப்​பட்ட 42-வது சட்​டத்​திருத்​தம், அரசின் கைகளில் எல்​லை​யற்ற அதி​காரத்​தைக் குவித்​து, நிறு​வனங்​களின் சுதந்​திரத்​தை​யும் அரசி​யலமைப்​பின் ஆன்​மாவை​யும் சிதைத்​தது.

பின்​னர் அந்த விதி​கள் மாற்​றப்​பட்​டு, அரசி​யலமைப்​புச் சமநிலை மீட்​டெடுக்​கப்​பட்​டது. அன்று ஜனநாயகத்​தைக் காக்க சிறை​வாசம் அனுப​வித்த தியாகி​களின் உத்​வேகமே இன்று நம்மை வழிநடத்​துகிறது.

இந்​நிலை​யில், தற்​போது, பிரதமர் மோடி​யின் தலை​மையி​லான அரசு தொலைநோக்கு, அரசி​யலமைப்பு விழு​மி​யங்​களை பாது​காத்து வரு​கிறது. தேசி​யக் கல்விக் கொள்கை மற்​றும் ஜம்​மு-​காஷ்மீருக்​கான பிரிவு 370 ரத்து போன்ற வரலாற்​றுச் சிறப்​புமிக்க முடிவு​கள் மூலம் தேசிய விருப்​பங்​கள் பூர்த்தி செய்​யப்​பட்​டுள்​ளன.

எனவே, நெருக்​கடி நிலை தந்த வரலாற்​றுப் பாடங்​களை இன்​றைய இளைஞர்​கள் விரிவாகக் கற்க வேண்​டும். ஜனநாயகம் என்​பது நமக்கு எளி​தாகக் கிடைத்​து​ விட​வில்​லை. அரசி​யலமைப்​பை​யும், ஒவ்​வொரு குடிமக​னின் சுதந்​திரத்​தை​யும் பாது​காக்​கும் பொறுப்பு அடுத்​தடுத்த தலை​முறை​களிடம்​ உள்​ளது என்றார்.

SCROLL FOR NEXT