தமிழகம்

சட்டவிரோத செயல்களை சுட்டிக்காட்டுபவர்களின் சமூக வலைதளத்தை முடக்குவதா? - காவல் துறைக்கு பாஜக கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: பாஜக மாநில செய்தி தொடர்​பாளர் ஏஎன்​எஸ்​.பிர​சாத் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்​னை​யில் நடை​பெற்ற 49-வது புத்​தகக் காட்​சி​யில், ‘கீழைக்​காற்​று’ பதிப்​பகம் சார்​பில், உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனை இழி​வுபடுத்​தும் வகை​யில் ஒரு புத்​தகம் காட்​சிப்​படுத்​தப்​பட்​டது.

இந்த சட்​ட​விரோதச் செயலைக் கண்​டித்​து, சம்​பந்​தப்​பட்ட பதிப்​பகத்​தின் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி மத்​திய உள்​துறை செயலர், சட்​டத் துறைச் செயலர், தமிழக டிஜிபி மற்​றும் சென்னை மாநகர காவல் ஆணை​யர் ஆகியோ​ருக்கு மின்​னஞ்​சல் வாயி​லாகப் புகார் அளித்​திருந்​தேன்.

          

மேலும், இதுகுறித்த தகவல்​களை எனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் பதி​விட்​டு, சென்னை காவல் துறையை​யும் டேக் செய்​திருந்​தேன். இந்நிலையில் அந்த சட்​ட​விரோதச் செயலைச் சுட்​டிக்​காட்​டிய எனது எக்ஸ் பக்​கத்தை முடக்​கு​வதற்​குத் தமிழக சைபர் க்ரைம் பிரிவு முயற்​சிப்​பது அதிர்ச்​சி​யளிக்​கிறது.

சைபர் க்ரைம் டிஜிபி சந்​திப் மிட்​டல், எனது பதிவு ‘இந்​தி​யா​வின் இறை​யாண்​மைக்​கும், பொது ஒழுங்​குக்​கும் எதி​ரானது’ என்று கூறி, தகவல்​தொழில்​நுட்​பச் சட்​டத்​தின் கீழ் எனது கணக்கை முடக்க எக்ஸ் நிறு​வனத்​துக்கு மின்​னஞ்​சல் அனுப்​பியுள்​ளார்.

இது சட்​ட​விரோத​மானது மற்​றும் ஒருதலைப்​பட்​ச​மானது. உண்​மை​களைப் பேசுபவர்​களின் குரலை முடக்க நினைக்​கும் போக்​கைத் தமிழக காவல் துறை உடனடி​யாகக் கைவிட வேண்​டும்.இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT