தமிழகம்

மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு மேம்பாட்டு ஆணையம்: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

செய்திப்பிரிவு

சென்னை: ​மாமல்லபுரம், கன்​னி​யாகுமரி போன்ற சுற்​றுலாப் பகு​தி​களுக்குசிறப்பு பகுதி மேம்​பாட்டு ஆணை​யத்தை அமைப்​ப​தற்​கான சட்ட முன்​வடிவு பேர​வை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று தமிழ்​நாடு சிறப்​புப் பகுதி மேம்​பாட்டு ஆணை​யம் குறித்த சட்ட முன்​வடிவை சுற்​றுலாத் துறை அமைச்​சர் ஆர்​.​ராஜேந்​திரன் தாக்​கல் செய்​தார்.

          

அதன் நோக்க காரணஉரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மாமல்லபுரம், கன்​னி​யாகுமரி போன்ற முக்​கிய சுற்​றுலா மையங்​களில் நவீன உள்​கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்த ரூ.300 கோடி முதலீடு செய்​யப்​படும் என்று பட்​ஜெட்​டில் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மறு​புறம் அதி​கரித்து வரும் மக்​கள்​தொகை பெருக்​கம், தொழில் மயமாக்​கல், சுற்​றுலாத் துறை​யின் நிலை​யான வளர்ச்சி ஆகியவை நமது நவீன நகரங்​களை திட்​ட​மிடு​வ​தில் எதிர்​கொள்​ளப்​படும் சவாலாக அமைந்​துள்​ளது.

பொது வசதி​கள் பற்​றாக்​குறை, சுற்​றுச்​சூழல் சீர்​கேடு, சூழலியல் சமநிலை​யின் பாதிப்பு ஆகியவை தொழில்​துறை மற்​றும் சுற்​றுலா துறை​களி​லும் மிகுந்த பாதிப்பை ஏற்​படுத்​துகிறது. அத்​தகைய சவால்​களை திறம்பட கையாள தனித்​து​வ​மான மேம்​பாட்டு ஆணை​யங்​களை நிறுவ வேண்​டிய அவசி​யம் உள்​ளது.

அதன்​படி, உள்​ளாட்சி அதி​கார அமைப்​பு​கள் அல்​லது பாரம்​பரிய ஆணை​யத்​தின் அதி​கார வரம்​பு​களை மீறாமல், திட்​ட​மிட்ட கட்​டமைப்பை உரு​வாக்க ஒரு சிறப்​புச் சட்​டம் இயற்​று​வதற்கு முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

அதற்​கேற்ப எந்​தவொரு பகு​தி​யை​யும் சிறப்பு மேம்​பாட்டு பகு​தி​யாக அறிவிக்​க​வும், அந்​தப் பகு​திக்கு ஒரு சிறப்பு மேம்​பாட்டு ஆணை​யத்தை அமைக்​க​வும் அரசுக்கு முழு அதி​காரம் வழங்​க​வும் இந்த சட்​டத்​தில் வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

முதல்​கட்​ட​மாக மாமல்லபுரம், கன்​னி​யாகுமரி ஆகிய பகு​தி​களை மேம்​படுத்த அமைக்​கப்​படும் சிறப்​பு பகுதி மேம்​பாட்டு ஆணை​யம், சிறப்பு முதன்மை திட்​டத்தை தயாரிக்​கும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. இந்த சட்ட முன்​வடிவு இன்று (ஜன.24) ஆய்வு செய்​யப்​பட்டு நிறைவேற்​றப்பட உள்ளது.

SCROLL FOR NEXT