தமிழக-கேரள எல்லையான குமுளி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்.

 
தமிழகம்

ஏப்.8, 9-ம் தேதிகளில் கேரளாவுக்கு தமிழகத்தில் இருந்து தோட்ட தொழிலாளர்கள் வருவதற்கு தடை

என்.கணேஷ்ராஜ்

கூடலூர்: கேரள மாநிலத்​தில் வரும் 9-ம் தேதி சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ள​தால் 8, 9 ஆகிய தேதி​களில் தமிழகத்​தில் இருந்து தோட்​டத் தொழிலா​ளர்​கள் கேரளத்​துக்கு வர தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழக- கேரள எல்​லை​யில் தேனி மாவட்​டம் அமைந்​துள்​ளது. இங்​கிருந்து குமுளி, கம்​பம்​ மெட்​டு, போடிமெட்டு வழி​யாக கேரளா செல்​வதற்​கான மலைச்​சாலைகள் உள்​ளன. இங்​குள்ள இடுக்கி மாவட்​டத்​தில் ஏலக்​காய், காபி, தேயிலை எஸ்​டேட்​கள் உள்​ளன. இங்கு பணியாற்ற தமிழகத்​தில் இருந்து ஏராள​மான தொழிலா​ளர்​கள் அழைத்​துச் செல்​லப்​படு​கின்​றனர்.

          

இந்​நிலை​யில், வரும் 9-ம் தேதி கேரள சட்​டப்​பேரவைக்கான வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது. இதை முன்​னிட்​டு, கடந்த சில வாரங்​களாக மாநில எல்​லை​யில் இரு மாநில அதி​காரி​கள் சார்​பில் சோதனை​கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒருபகு​தி​யாக, கேரளத்​தில் வாக்​குப்​ப​திவு நடை​பெறும் ஏப்.9 மற்​றும் அதற்கு முந்​தைய நாளான 8 ஆகிய 2 நாட்​கள் கேரளா​வுக்​குள் தோட்ட தொழிலா​ளர்​களை ஏற்​றிக்​கொண்டு வரும் ஜீப்​பு​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

அதே​நேரம், வழக்​க​மான பொது மற்​றும் தனி​யார் போக்​கு​வரத்​துக்கு எவ்​வித கட்​டுப்​பாடும் இல்​லை. இதுகுறித்து வனத்​துறை​யினர் கூறுகை​யில், ‘வரும் 9-ம்

தேதி வாக்​குப் பதிவுக்​காக கேரளத்​தில் சம்​பளத்​துடன் கூடிய பொது விடு​முறை அளிக்​கப்​பட்​டுள்​ளது. அன்று எஸ்​டேட் உள்​ளிட்ட பல இடங்​களில் எந்த வேலையும் நடை​பெறாது. மேலும் அரசு, பொதுத்​துறை மற்​றும் தனி​யார் நிறுவன தொழிலா​ளர்​களுக்​கும் விடு​முறை அளிக்​கப்​பட்​டுள்​ளது.

வாக்​குப்​ப​திவு நாளில் வெளி​மாநிலத்​தில் இருந்து அதி​கப்​படி​யான ஆட்​கள் இங்கு வரு​வது நன்​னடத்தை விதி​களுக்கு எதி​ரானது என்​ப​தால், இந்​தக் கட்​டுப்​பாடு விதிக்​கப்​பட்​டுள்​ளது’ என்​றனர். இதுகுறித்து ஒப்​பந்​த​தா​ரர்​கள், ஜீப் ஓட்​டுநர்​களுக்​கும் தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.

SCROLL FOR NEXT