அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணர்கள்.படம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி

 
தமிழகம்

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு: 1,000 காளைகள் பங்கேற்க ஏற்பாடு

500 இளைஞர்கள் களமிறங்க முடிவு

செய்திப்பிரிவு

மதுரை: பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு மதுரை அவனி​யாபுரம் ஜல்​லிக்​கட்​டுப் போட்டி இன்று காலை 7 மணி​யள​வில் தொடங்​கு​கிறது. இந்​தப் போட்​டியைக்​காண தமிழகம் முழு​வதும் இருந்து ஜல்​லிக்​கட்டு ஆர்​வலர்​கள், பார்​வை​யாளர்​கள் திரள்​வர் என்​ப​தால் தேவை​யான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

தமிழர் திரு​நாளான தைப்​பொங்​கலை​யொட்டி மதுரை மாவட்​டத்​தில் அரசு சார்​பில் நடக்​கும் முதல் ஜல்​லிக்​கட்​டுப் போட்டி அவனி​யாபுரத்​தில் இன்று (ஜன. 15) காலை தொடங்​கு​கிறது. அமைச்​சர்​கள் பி.மூர்த்​தி, பழனிவேல் தியாக​ராஜன் ஆகியோர் போட்​டியைத் தொடங்கி வைக்​கின்​றனர்.

அவனி​யாபுரம் - திருப்​பரங்​குன்​றம் சாலை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள வாடி​வாசல் வழி​யாக காளை​கள், ஒன்​றன் பின் ஒன்​றாக அவிழ்த்​து​விடப்​படும். மதுரை, விருதுநகர், சிவகங்​கை, ராம​நாத​புரம், திண்​டுக்​கல், தேனி, திருச்சி உள்​ளிட்ட பகு​தி​களி​லிருந்து 1,000 காளை​கள் பங்​கேற்​கின்​றன. ஒரு மணி நேரத்​தில் 80 முதல் 90 காளை​கள் வரை வாடி​வாசல் வழி​யாக அவிழ்த்​து​விடு​வதற்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. 500 மாடு​பிடி வீரர்​கள் களமிறங்க உள்​ளனர்.

இப்​போட்​டிக்​கான ஏற்​பாடு​களை மாநக​ராட்சி நிர்​வாகம் மேற்​கொண்​டுள்​ளது. இறு​திக்​கட்ட பணி​களை அமைச்​சர் பி.மூர்த்​தி, மாநக​ராட்சி ஆணை​யர் சித்​ரா, காவல் ஆணை​யர் லோக​நாதன் மற்​றும் அதி​காரி​கள் நேற்று ஆய்வு செய்​தனர். ஜல்​லிக்​கட்​டுப் பாது​காப்பு பணி​யில் ஈடு​படும் போலீ​ஸார் பாது​காப்பு ஒத்​திகை நிகழ்வு நடத்​தினர்.

வாடி​வாசல், விழா மேடை, வீரர்​கள் களமிறங்​கும் இடம், காளை​களை பரிசோதனை செய்​யும் பகு​தி​யில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்​கள் மோப்ப நாய் உதவி​யுடன் சோதனை மேற்​கொண்​டனர். இப்​போட்​டியை காண தமிழகம் முழு​வதும் இருந்து ஜல்​லிக்​கட்டு ஆர்​வலர்​கள், பார்​வை​யாளர்​கள் திரள்​வர் என்​ப​தால், அவர்​களுக்​கான கழிப்​பறை, குடிநீர் உள்​ளிட்ட வசதி​களுக்கு மாநக​ராட்சி நிர்​வாகம் ஏற்​பாடு செய்​துள்​ளது.

கால்​நடை பராமரிப்​புத் துறையை சேர்ந்த மருத்​து​வர்​கள், ஊழியர்​கள், அதி​காலை முதலே காளை​களை பரிசோ​தித்து அனுப்​பும் பணி​யில் ஈடுபட உள்ளனர். ஜல்​லிக்​கட்​டுப் போட்டி பாது​காப்​புப் பணி​யில் 2 ஆயிரம் போலீ​ஸார் ஈடுபட உள்​ளனர்.

SCROLL FOR NEXT