தமிழகம்

தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையை மீண்​டும் கூடும் தேதி குறிப்​பிடப்​ப​டா​மல் ஒத்​திவைப்​ப​தாக பேர​வைத் தலை​வர் ஜேசிடி. பிர​பாகர் அறி​வித்​தார். தவெக அரசின் முதல் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் ஜூன் 19-ம் தேதி தொடங்​கியது.

அதன்​பின் அன்று நடை​பெற்ற அலு​வல் ஆய்​வுக்​குழு​வில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீதான விவாதத்தை 23-ம் தேதி வரை நடத்த முடி​வு செய்யப்பட்டது.

அதன்​படி ஜூன் 19-ம் தேதி கூடிய சட்​டப்​பேர​வை​யில் காவிரி ஆற்​றின் குறுக்கே மேகே​தாட்டு அணை கட்​டு​வதை எதிர்க்​கும், முதல்​வர் விஜய் முன்​மொழிந்த அரசின் தனித்​தீர்​மானம் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டது.

இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதம் நடை​பெற்​றது. நிறைவு நாளான நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீது முதல்​வர் விஜய் பதி​லுரை அளித்​தார்.

இதையடுத்​து, சட்​டப்​பேர​வையை தேதி குறிப்​பி​டா​மல் ஒத்​திவைப்​ப​தற்​கான தீர்​மானத்தை அமைச்​சர் செங்​கோட்​டையன் கொண்​டு​வந்​து, குரல் வாக்​கெடுப்பு மூலம் நிறைவேற்​றப்​பட்​டது. இதையடுத்து சட்​டப்​பேரவை மீண்​டும் கூடும் தேதி குறிப்​பிடப்​ப​டா​மல் ஒத்​திவைப்​ப​தாக பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர் அறி​வித்​தார்.

முன்​ன​தாக சட்​டப்​பேரவை நேற்று தொடங்​கியதும் முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் அ.சின்​னச்​சாமி, வீ.எஸ்​.​காளி​முத்து ஆகியோர் மறைவுக்கு இரங்​கல் குறிப்​பு​கள் வாசிக்​கப்​பட்​டு, உறுப்​பினர்​கள் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்​சலி செலுத்​தப்பட்டது.

SCROLL FOR NEXT