தமிழகம்

தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு: பேரவைத் தலைவர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேரவை மீண்​டும் கூடும் தேதி குறிப்​பிடப்​ப​டா​மல் ஒத்​திவைப்​ப​தாக பேர​வைத்​ தலை​வர் மு.அப்​பாவு அறி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் ஆண்டு முதல் கூட்​டம், கடந்த ஜன.20-ம் தேதி தொடங்​கியது. ஆளுநர் ஆர்​.என்​.ரவி உரையை வாசிக்​காமல் பேர​வையைவிட்டு வெளி​யேறி​னார். இதையடுத்து ஆளுநர் உரையை அவர் படித்​த​தாக அவைக்​குறிப்பில் பதிவு செய்​யும் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

          

அதன்​பின் அன்று நடை​பெற்ற அலு​வல் ஆய்​வுக்​குழு​வில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீதான விவாதத்தை ஜன.24-ம் தேதி வரை நடத்​து​வது என்று முடி​வெடுக்​கப்​பட்​டது. அதன்​படி, ஜன.21-ம் தேதி மறைந்த மக்​களவை முன்​னாள் தலை​வர் சிவ​ராஜ் பாட்​டீல், எம்​எல்ஏ கு.பொன்​னு​சாமி மற்​றும் மறைந்த முன்​னாள் உறுப்​பினர்​கள், முக்​கிய ஆளு​மை​களுக்கு இரங்​கல் வாசிக்​கப்​பட்டு அன்​றைய நாள் பேரவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதம் ஜன.22-ம் தேதி தொடங்​கியது. அடுத்த நாள் ஜன. 23-ல் சட்​டப்​பேர​வை​யில்முதல்​வர் முன்​மொழிந்த தேசிய ஊரக வேலை உறு​தித் திட்​டம் குறித்த அரசின் தனித்​தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. பின்னர் 5 சட்ட முன்​வடிவு​கள் அறி​முகம் செய்​யப்​பட்​டன. அதில் மிகை செல​வுக்​கான நிதி ஒதுக்​கச் சட்டமுன்​வடி​வும் நிறைவேற்​றப்​பட்டது.

நிறைவு நாளான நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீது முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பதி​லுரை அளித்​தார். தொடர்ந்து நேற்று புதி​தாக அறி​முகம் செய்​யப்​பட்ட 5 சட்ட முன்​வடிவு​களு​டன் சேர்த்து 10 சட்ட முன்​வடிவு​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

இதையடுத்​து, சட்​டப்​பேர​வையை தேதி குறிப்​பி​டாமல் ஒத்​திவைப்​ப​தற்​கான தீர்​மானத்தை அமைச்​சர் எவ.வேலு கொண்​டு​வந்​து, குரல் வாக்​கெடுப்பில் நிறைவேற்​றப்​பட்​டது. இதையடுத்​து, பேரவை மீண்​டும் கூடும் தேதி குறிப்​பிடப்​ப​டா​மல் ஒத்​திவைப்​ப​தாக பேர​வைத்​தலை​வர் மு.அப்​பாவு அறி​வித்​தார். தொடர்ந்து இடைக்​கால பட்​ஜெட் கூட்​டத் தொடர் பிப்​ர​வரி மாதம் நடத்​தப்​படும்​ என்​று எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT