தமிழகம்

“விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தையா? டீயும் காபியும் ஒன்றாக கலக்காது” - அண்ணாமலை பதில்

செய்திப்பிரிவு

விஜய் கட்சி​யுடன் பேச்சு​வார்த்தை நடத்​தப்​படு​கிறதா என்ற கேள்​விக்கு டீயும் காபியும் ஒன்றாக கலக்​காது என அண்ணாமலை பதில் அளித்​துள்​ளார்.

சென்னை சைதாப்​பேட்டை நீதி​மன்​றத்​தில் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான அவதூறு வழக்​கில் சாட்​சியம் அளித்த பின், செய்​தி​யாளர்​களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறிய​தாவது: கள்ளக்​குறிச்சி விஷ சாராய விவகாரத்​தில் பாஜகவுக்​கும், எனக்​கும் தொடர்​பிருப்​பதாக அவதூறு பரப்பிய ஆர்.எஸ்.பாரதி மீது தொடரப்​பட்ட வழக்​கில் சாட்​சியம் அளித்​துள்​ளேன்.

          

மன்னிப்பு கேட்​காததா​லும், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்​காததா​லும் இந்த சட்ட நடவடிக்கை எடுக்​கப்​பட்டுள்​ளது. கடந்த முறை நீதி​மன்ற விசா​ரணை​யின் போது, என் மீது அபாண்​டமான குற்​றச்​சாட்டுகளை முன்​வைத்த திமுக எம்.பி டி.ஆர்​.பாலு மீது இன்று புதிய அவதூறு வழக்கு தாக்கல் செய்​யப்​பட்டுள்​ளது. இதற்கான சாட்​சியம் ஏப்ரல் 7-ம் தேதி அளிக்​கப்​படும்.

யார் மீதும் அவதூறு வழக்கு தொடரக்​கூடாது என்ற கொள்​கை​யில் இருந்​தவன் நான். ஆனால், திமுக​வின் எல்லை​யற்ற வன்மப் பேச்​சுகளுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கவே, என் வாழ்​நாளில் முதல்​முறையாக இந்த சட்டப் போராட்டத்​தைத் தொடங்​கி​யுள்​ளேன். முதல்​வரின் கண்ணீர் அவரது கட்சிக்காக இருக்க வேண்​டுமே தவிர, அதிமுகவுக்காக அல்ல. ஐந்து ஆண்டு கால ஆட்சி​யில் சொல்​லிக்​கொள்​ளும் படி எந்த சாதனையும் இல்லாததால், மக்களைத் திசைதிருப்ப முதல்வர் ‘நீலிக்​கண்​ணீர்’ வடிக்​கிறார்.

“பாஜக அதிமுகவை விழுங்​கிவிடும்” என முதல்வர் ஸ்டா​லின் சொல்​கிறார். “1999 முதல் 2003 வரை திமுகவுடன் பாஜக கூட்ட​ணி​யில் இருந்​த​போது திமுக விழுங்​கப்​பட்டதா? அல்லது தற்போது கூட்ட​ணி​யில் உள்ள காங்​கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக விழுங்​கிவிடு​மா?” மாநில தலைவர் நயினார் நாகேந்​திரன் கூறியது போல, விஜய் கட்சி​யுடன் அதிகாரப்​பூர்வப் பேச்சு​வார்த்தை எதுவுமில்லை. என்னை பொறுத்​தவரை “டீயும் காபியும் ஒன்றாகக் கலக்​காது”. ஏனென்​றால், சித்​தாந்​தங்கள் வேறானவை. தற்போதுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையாக உள்ளது.

மாநில செய்தி தொடர்​பாளர் பதவியிலிருந்து ஏ.என்​.எஸ்.பிரசாத் நீக்​கப்​பட்டது குறித்​துத் தவறான பிம்​பத்தை உருவாக்க வேண்​டாம். அவர் கட்சி​யின் மூத்த உறுப்​பினர், அவருக்கு விரைவில் வேறு முக்​கியப் பொறுப்​பு​கள் வழங்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறினார்​.

SCROLL FOR NEXT