தமிழகம்

காவிரி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் புதிய மேலாண்மை வாரியம் அமைக்க அன்புமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: பாமக தலை​வர் அன்​புமணி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: டெல்​லி​யில் நடந்த காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் கூட்​டத்​தில், காவிரி பாசன மாவட்​டங்​களில் கரு​கும் குறு​வைப் பயிர்​களை காப்​பாற்ற காவிரி​யில் தண்​ணீர் திறந்​து​விட கர்​நாடக அரசுக்கு ஆணை​யிட வேண்​டும் என்ற தமிழக அரசின் கோரிக்​கையை ஏற்க ஆணை​யம் மறுத்துவிட்​டது.

கர்​நாடகத்​தில் உள்ள அணை​களில் இன்​றைய நில​வரப்​படி 60.21 டிஎம்சி நீர் உள்​ளது. இதில் குறைந்​த​பட்​ச​மாக 23 டிஎம்சி போக, பெங்​களூரு குடிநீர் தேவைக்​காக 5 டிஎம்சி நீரை வைத்​துக்​கொண்​டாலும் மீத​முள்ள 32 டிஎம்சி நீரை தமிழகத்​துக்கு திறந்​து​விட முடி​யும்.

இந்த உண்​மை​கள் தெரிந்​தும் தமிழகத்​துக்கு தண்​ணீர் திறந்து விடு​மாறு உத்​தர​வி​டாததற்கு காரணம், அதை செயல்​படுத்த வைக்​கும் அதி​காரம் ஆணை​யத்​துக்கு இல்​லாதது​தான்.

காவிரியில் தமிழகத்​துக்​கான உரிமை​களைப் பெற வேண்​டு​மா​னால் நடு​வர் மன்ற தீர்ப்​பின்​படி, காவிரி குறுக்கே இரு மாநிலங்​களி​லும் கட்​டப்​பட்​டுள்ள அணை​களை கையாளும் அதி​காரம் கொண்ட பக்ரா பியாஸ் மேலாண்மை வாரி​யம் போன்று புதிய காவிரி மேலாண்மை வாரி​யம் அமைப்​பது​தான் ஒரே தீர்​வு. இதற்​​காக தமிழக அரசு நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​. இவ்​​வாறு அவர்​ வலி​யுறுத்​தியுள்​ளார்​.

SCROLL FOR NEXT