தமிழகம்

போலீஸ் விசாரணைக்கு இன்று ஆஜராகிறார் அன்பில் மகேஸ்

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த திமுக ஆட்​சி​யில், தனி​யார் பள்ளி​களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தர பணம் வசூலித்ததாக 177 பள்​ளிகளிடம் இருந்து புகார்​கள் பெறப்​பட்​டுள்​ள​தாக​வும், இதில் ரூ.100 கோடி வரை மோசடி நடந்துள்​ள​தாக​வும் போலீஸ் தரப்​பில் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்​சி​யாக, அப்​போதைய பள்​ளிக் கல்​வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தொடர்புடைய 9 இடங்களில் சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் 16-ம் தேதி சோதனை நடத்​தினர். 18-ம் தேதி (இன்​று) சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் உள்ள மத்​திய குற்​றப்​பிரிவு போலீஸில் விசா​ரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மனும் வழங்​கப்​பட்​டது. அதன்பேரில், அவர் இன்று ஆஜராவார் என தெரிகிறது.

SCROLL FOR NEXT