அன்பில் மகேஸ் 
தமிழகம்

“போராடும் இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம்” - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம். நல்லமுடிவு எடுப்போம் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார்.

சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த டிசம்பர் 26-ம் தேதிமுதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 9-வது நாளாக கல்வித்துறை தலைமையகமான டிபிஐ வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்​டம் குறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கத்தின் பொதுச்​ செய​லா​ளர் ஜே.​ராபர்ட் கூறும்​போது, ‘‘சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்​கையை வலியுறுத்தி போராடி வரு​கிறோம். கடந்த தேர்​தலின்​போது எங்​கள் கோரிக்​கையை ஏற்ற திமுக, அதை தேர்​தல் வாக்​குறு​தி​யாக​வும் அறி​வித்​தது. ஆனால்,நிறைவேற்​ற​வில்​லை. ஊதிய முரண்​பாடு களை​யப்​ப​டா​விட்​டால், பள்​ளி​கள் திறந்​த ​பிறகும் போராட்​டம் தொடரும். தமிழக அரசு எங்​களை அழைத்துப் பேசிகோரிக்கையை நிறைவேற்ற வேண்​டும்’’ என்​றார்.

விரைவில் நல்ல முடிவு: இந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தொடர் போராட்டத்தில்ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் என் குடும்ப உறுப்பினர்களை போன்றவர்கள். அவர்களை நாங்கள் கைவிட மாட்டோம். நாங்கள் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். போராட்டம் நடத்துபவர்கள் ஒரு கட்டத்தில் இருக்கிறார்கள். விரைவில் நல்ல முடிவை எடுப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஆசிரியர்களின் செயலை போராட்டமாகவோ, ஆர்ப்பாட்டமாகவோ நான் பார்க்கவில்லை. தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே ஆசிரியர்கள் போராடுகிறார்கள்’’ என்றார்.

SCROLL FOR NEXT