ஜி.கே.வாசன் | கோப்புப் படம் 
தமிழகம்

வாக்கு எண்ணும் மையங்களில் அதிமுக கூட்டணி கட்சியினர் விழிப்புடன் இருக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் நாளை வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்ள நிலை​யில், அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி கட்​சிகளின் பொறுப்​பாளர்​கள் வாக்கு எண்​ணும் மையங்​களில் மிகுந்த விழிப்​புட​னும், கவனத்​துட​னும் செயல்பட வேண்​டும் என தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக மக்​கள் ஒரு மாற்​றத்​தை​யும், முன்​னேற்​றத்​தை​யும் எதிர்​பார்த்​துக் காத்​திருக்​கும் மிக முக்​கியதினமான நாளை (மே 4) அமையப்​போகிறது. தமிழக மக்​களின் நம்​பிக்​கையை பெற்ற கூட்​ட​ணி​யாக விளங்​கும் அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி, தமிழகத்தை வளர்ச்​சிப் பாதை​யில் அழைத்​துச் செல்​லும். அதற்​கேற்ப கூட்​டணி கட்சிகளின் பணி அமைய வேண்​டும்.

மக்​கள் எதிர்​பார்க்​கும் வளமான தமிழகம் அமைய​வும், தங்கு தடை​யின்றி புதிய ஆட்சி அமையவும் அறி​விப்பு வெளி​யாக வேண்​டு​மா​னால், வாக்கு எண்​ணும் இடங்​களில் எவ்​வித தொய்​வுமின்றி நாம் பணி​யாற்ற வேண்​டியது அவசி​யம்.குறிப்​பாக, வாக்கு எண்​ணிக்​கை​யின் போது ஏதேனும் தவறுகள் நடக்க வாய்ப்​பிருந்​தால், அவற்றை உடனடி​யாக அடை​யாளம் கண்டு அதி​காரி​களுக்​கும், பொது​மக்​களுக்​கும் வெளிப்​படுத்த வேண்​டும்.

எனவே, தமிழகம் முழு​வதும் உள்ள வாக்கு எண்​ணும் மையங்​களில் நாளை பணி​யாற்​றும் கூட்​ட​ணிக் கட்​சிகளின் பொறுப்​பாளர்​கள், மக்​கள் விரும்​பும் மாற்​றத்​துக்கு எவ்​விதத் தடை​யும் ஏற்​ப​டாத வகை​யில் கண்​ணும் கருத்​து​மாக விழிப்​புடன் இருந்​து, தங்​களின் கடமையை உணர்ந்து பொறுப்​போடு செயல்பட வேண்​டும். இவ்​வாறு அவர் வலி​யுறுத்​தி​ உள்​ளார்.

SCROLL FOR NEXT